ஸ்டாலினை நான் கொண்டாடுகிறேன்.. ஏன் தெரியுமா.. வைரமுத்து நெகிழ்ச்சி
மு.க.ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை: அண்ணாவுக்கு பக்கத்தில் கருணாநிதியை நிறுத்தி வைத்த அந்த அருஞ்செயலுக்காகவே மு.க.ஸ்டாலினை நான் கொண்டாடுகிறேன் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் மேல் தனிக்காதல் வைத்திருந்தவர் வைரமுத்து. அவருக்காக பல பாடல்களையும், கவிதைகளையும் எழுதி தன் பாசத்தை வெளிப்படுத்தியவர் வைரமுத்து.
கருணாநிதி மீதிருந்த நெருக்கம் மு.க.ஸ்டாலின் மீது அவருக்கு இருந்ததில்லை. தற்போது கட்சி தலைவராக அவர் பொறுப்பேற்றும் இந்த நெருக்கம் அதிகரிக்கவும் இல்லை. சின்மயி விவகாரத்தின்போதும் திமுக தரப்பிலிருந்து வைரமுத்துவுக்கு ஆதரவும் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை.

வெண்கல சிலை பரிசு
இந்த நிலையில், வைரமுத்து, ஸ்டாலினை நேற்று அறிவாலயத்தில் சந்தித்து பேசினார், அப்போது, கருணாநிதிக்கு சிலை அமைத்ததற்காக மனமார்ந்த பாராட்டை தெரிவித்தார். அதற்கு நன்றியாக ஸ்டாலின், கருணாநிதியின் மார்பளவு வெண்கல சிலையை நினைவு பரிசாக வழங்கினார்.

ஈரம் கட்டிய நிகழ்ச்சி
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து சொன்னதாவது: "கருணாநிதியின் சிலை திறப்பு என்பது வெறும் விழாவோ, சடங்கோ சம்பிரதாயமோ இல்லை. அந்த விழா கருணாநிதியை உயிராக கருதியவர்கள், அவரை இன்னும் நெஞ்சில் சுமந்து கொண்டு இருப்பவர்கள் அத்தனை பேரின் கண்களிலும் ஈரம் கட்டிய நிகழ்ச்சி ஆகும். அந்த நிகழ்ச்சி என்பது கருணாநிதிக்கு, ஸ்டாலின் செய்த மிகப்பெரிய வரலாற்று திருப்பணி என்று நான் நினைக்கிறேன்.

அண்ணா, கருணாநிதி
அதுவும், அண்ணாவுக்கு பக்கத்தில் கருணாநிதியை நிறுத்தி வைத்த அந்த அருஞ்செயலுக்காகவே ஸ்டாலினை நான் கொண்டாடுகிறேன். அண்ணா வேறு, கருணாநிதி வேறு அல்ல. மிக முக்கியமாக தமிழர்கள் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு.

நெஞ்சில் நிறுத்த வேண்டும்
தமிழுக்காகவும், இனத்துக்காகவும், நாட்டுக்காகவும் பாடுபட்ட அந்த இருபெரும் தலைவர்களும் அருகருகே துயில் கொண்டு இருக்கிறார்கள். அருகருகே நின்று கொண்டு இருக்கிறார்கள். தமிழர்களும் இந்த 2 பேரையும் நெஞ்சில் அருகருகே நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன்.

தந்தை-மகன்
கருணாநிதியும், ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் தாங்கள் ஆற்ற வேண்டிய பணிகளை செய்துவிட்டனர். இதன் மூலம், திருவள்ளுவர் தந்த இலக்கணத்துக்கு தந்தையும், மகனும் இலக்கியமாக திகழ்கிறார்கள். கருணாநிதியின் சிலையை எனக்கு ஸ்டாலின் பரிசாக தந்திருக்கிறார்.

அடையாள சிலை
கருணாநிதியின் தமிழுக்கும், அவரது ஆற்றலுக்கும், இனமொழி போராட்டத்துக்கும், அவரது பேரறிவுக்கும் அடையாளமாக இந்த சிலை என்னோடு இருந்து வழிகாட்டும் என நான் நம்புகிறேன்" என்றார்.
-
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications