ஜூலை 11 இல் பொதுக் குழு நடைபெறாது.. நீதிமன்ற அவமதிப்பு.. கோர்ட்டுக்கு செல்வோம்.. வைத்திலிங்கம்
சென்னை: ஜூலை 11-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவித்த பொதுக் குழு நடைபெறாது என்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்வோம் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இதுகுறித்து வைத்திலிங்கம் கூறுகையில் அவைத் தலைவராக தமிழ் மகன் உசேனை தேர்வு செய்தது செல்லாது. பொதுவாக அவைத் தலைவர் என்பவர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு அதிமுக நிறுவன தலைவர், அதிமுக பொதுச் செயலாளர் ஆகியோரால் அறிவிக்கப்படுவது வழக்கம்.

23 தீர்மானங்கள்
தற்போது அவைத் தலைவர் என்பவர் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் அறிவிக்கப்பட வேண்டும். மேலும் 23 தீர்மானங்களை நிராகரித்திருக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு உரிமையே இல்லை. அவைத் தலைவருக்கு பொதுக் குழுவை கூட்ட எந்த அதிகாரமும் இல்லை.

பொதுக் குழு கூட்டம்
இன்று நடந்த பொதுக் குழு கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம். ஜூலை 11-ஆம் தேதி பொதுக் குழு நடைபெறாது. பொதுக் குழுவில் பதவி வெறி தலைக்கேறி காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டனர். 23 தீர்மானங்களையும் நிராகரித்ததால் இந்த பொதுக் குழுவே செல்லாது.

ஓரங்க நாடகம்
இன்று நடந்தது பொதுக் குழுவே இல்லை. அரை மணி நேரத்தில் நடத்தி முடிக்கப்பட்ட ஓரங்க நாடகம், பொதுக் குழுவே செல்லாததாகிவிட்டது. தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டு விட்டதால் பொதுக் குழுவே செல்லாததாகிவிட்டது. கூட்டுத் தலைமை குறித்து பேச்சுவார்த்தைக்கு தயார் என்றார்.

செல்லாது
வரும் ஜூலை 11-ஆம் தேதி அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்படுவார் என அவருடைய தரப்பு உறுதியாக சொல்லி வருகிறது. இந்த நிலையில் வரும் 11 ஆம் தேதி பொதுக் குழு கூடாது. பொதுக் குழு கூடுவதற்கு ஒருங்கிணைப்பாளரின் கையெழுத்து வேண்டும் என வைத்திலிங்கம் சொல்கிறார். மேலும் பொதுக் குழுவே செல்லாததாகிவிட்டாலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பதவிகளில் அப்படியே நீடிப்பார்கள் என்பதையும் வைத்திலிங்கம் தெளிவுப்படுத்திவிட்டார்.
-
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications