ஒற்றை தலைமை.. என்னது இது ஜெயக்குமார் அப்படி சொல்கிறார்.. வைத்திலிங்கம் இப்படி சொல்றாரே!
சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து யாரும் பேசவில்லை என முன்னாள் எம்பி வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரை சட்டசபையை தவிர அமைச்சர்களோ எம்எல்ஏக்களோ வேறு எங்கும் பேசமாட்டார்கள். அவர்களுடைய குரல் எப்படி இருக்கும் என்பது கூட பெரும்பாலும் தெரியாது.
ஆனால் ஜெயலலிதா மறைந்த பிறகு நிலைமை அப்படியே தலைகீழ் மாறிவிட்டது. ஆளாளுக்கு ஒன்று பேசுகிறார்கள். கூட்டணி கட்சியில் இருந்த பாஜகவை அனுசரிக்கும் போக்கை எடப்பாடி பழனிச்சாமி எடுக்கிறார், ஆனால் மற்றவர்களோ கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

தேர்தல் தோல்வி
அது போல் தேர்தல் தோல்வி உள்ளிட்டவைகளில் கூட ஆளாளுக்கு ஒரு கருத்தை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். சரி இங்கு இப்படி என்றால் நேற்று நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் இப்படிதான் இருக்கிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து ஆலோசனை நடத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

ஒற்றை தலைமை
ஒற்றை தலைமை வேண்டும் என்பதை பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் ஆலோசித்தனர் என்றும் அந்த ஒற்றை தலைமை யார் என்பதை கட்சிதான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் கு வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதிமுக மாவட்டச் செயலாளர்
அப்போது அவர் கூறுகையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து பேசவில்லை. அது போல் வரும் 23 ஆம் தேதி பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் குறித்தும் பேசவிலலை என்றார். ஒற்றை தலைமை குறித்து பேசியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்த நிலையில் அதற்கு முரண்பாடாக ஒரு கருத்தை கூறியுள்ளார வைத்திலிங்கம்.

எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்பு
முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றது முதல் இன்று வரை அதிமுகவின் முகமாக ஜெயக்குமார்தான் பெரும்பாலும் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார். ஆனால் இந்த முறை அவரது கருத்துக்கே எதிர்க்கருத்து சொல்லப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதை வெளியே சொல்லக் கூடாது என தலைமை உத்தரவு பிறப்பித்திருந்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications