இன்று திறக்கப்படும் வண்டலூர் உயிரியல் பூங்கா.. மக்கள் பார்வையிட அனுமதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்கா இன்றில் இருந்து மக்கள் பார்வைக்காக திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் 1600க்கும் குறைவாகவே கேஸ்கள் பதிவானது. இதையடுத்து தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகளும் அமலுக்கு வந்துள்ளது.

ஏற்கனவே கடற்கரைகளுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் 50 சதவிகித இருக்கைகள் அனுமதியுடன் சினிமா தியேட்டர்களும் திறக்கப்பட்டு உள்ளது. அதேபோல் மாநிலம் முழுக்க பூங்காக்களும் திறக்கப்பட்டு உள்ளது.

Vandalur Zoo opened for people again as the lockdown eased down in TN

ஆனால் நேற்று திறக்கப்பட வேண்டிய வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு தங்களுக்கு வரவில்லை என்பதால் அதிகாரிகள் இந்த பூங்காவை திறக்காமல் இருந்தனர். இதனால் பூங்காவை காண வந்த பலர் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர்.

ஏற்கனவே வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரண்டு சிங்கங்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு பலியானது. அதன்பின் மேலும் 7 சிங்கங்கள் பாதிக்கப்பட்டு கொரோனாவில் இருந்து மீண்டு வந்தது. இதனால் பூங்காவை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்தது.

தற்போது பூங்காவில் விலங்குகள் எந்த நோயும் இன்றி பாதுகாப்பாக உள்ள நிலையில் பூங்கா இன்றில் இருந்து திறக்கப்படும் என்று இணை இயக்குனர் காஞ்சனா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டு அரசின் அறிவிப்பை தொடர்ந்து இன்று காலையில் இருந்து மக்கள் பூங்காவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+