சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்.. பல ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: அரக்கோணம் ரயில்வே பணிமனையில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக சென்னை சென்டிரல் வழியாக இயக்கப்படும் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் குறிப்பிட்ட நாட்களில் தாமதமாக இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அரக்கோணம் ரயில்வே பணிமனையில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், சென்னை சென்டிரல் வழியாக இயக்கப்படும் சில ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருப்பதி செல்லும் ரயில்கள் ரத்து
சென்னை சென்டிரலில் இருந்து காலை 6.30 மணி, மதியம் 2.25 மணி மற்றும் மாலை 4.35 மணிக்கு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் (16057, 16053, 16203) வருகிற ஜூன் 26 மற்றும் 28-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல், திருப்பதியில் இருந்து சென்னை சென்டிரலுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (16054) ஜூன் 26 மற்றும் 28-ந் தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், சென்னை சென்டிரலில் இருந்து மாலை 5.55 மணிக்கு ஜோலார்பேட்டை செல்லும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் (16089) ஜூன் 27-ந் தேதி இயக்கப்படாது. அதேபோல், ஜோலார்பேட்டையில் இருந்து காலை 5 மணிக்கு சென்னை சென்டிரல் வரும் ஏலகிரி எக்ஸ்பிரஸ் (16090) ஜூன் 28-ந் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை வந்தே பாரத் ரயில்
எழும்பூரில் இருந்து இரவு 11.55 மணிக்கு சேலம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (22153), ஜூன் 27-ந் தேதி எழும்பூருக்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து இரவு 12.50 மணிக்கு புறப்படும். சென்னை சென்டிரலில் இருந்து மதியம் 2.15 மணிக்கு கோவை செல்லும் வந்தே பாரத் ரயில் (20643), ஜூன் 19 மற்றும் 26-ந் தேதிகளில் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். அதே ரயில் ஜூன் 20, 21, 22, 23, 25, 27 மற்றும் 28-ந் தேதிகளில் 45 நிமிடங்கள் தாமதமாக சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சென்னை சென்டிரல் - மும்பை, திருவனந்தபுரம், பெங்களூர் - சென்னை சென்டிரல், மங்களூரு - சென்னை சென்டிரல், மைசூரு - சென்னை சென்டிரல், அகமதாபாத் - சென்னை சென்டிரல் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர் மக்களுக்கு குட்நியூல்.. அமைச்சர் விக்னேஷ் அதிரடி நடவடிக்கை! -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?














Click it and Unblock the Notifications