பிக்பாஸ் செட்டுகிட்ட கும்மிருட்டு! என்னை தாக்கியவர் யாருனு கூட பார்க்க முடியல! வலியால் துடித்த வனிதா
சென்னை: மிகவும் வலியாக இருக்கிறது. நான் ஓய்வெடுக்க வேண்டும். என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா கலந்து கொண்டுள்ளார். தற்போது அந்த நிகழ்ச்சி 55 நாட்களை அடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளரான பிரதீப் ஆண்டனி டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவரால் பிக்பாஸ் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. பிரதீப் ஆண்டனி மீது ஜோவிகாவும் புகார் கொடுத்திருந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் ரிவ்யூ செய்த போது ஜோவிகா, மாயா, பூர்ணிமா உள்ளிட்டோரின் உரிமைக் குரல் சரியானது என வனிதா தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து நடிகை வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: என்னை பிரதீப் ஆதரவாளர் முகத்தில் தாக்கியதை அறிந்து பலர் போனிலும் சமூகவலைதளங்களிலும் நலம் விசாரித்தனர். அவர்களுக்கு எனது நன்றிகள். பிக்பாஸ் ஷூட்டிங் முடித்துக் கொண்டு வெளியே வந்த போது இரவு நேரத்தில் இருட்டாக இருந்தது.
என்னால் அந்த இடத்தில் சரியாக பார்க்க கூட முடியவில்லை. அது பழமையான கட்டடம், அங்கு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லை. ஆனால் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. தயவு செய்து வெறுப்பை பரப்பாதீர்கள் என சிலருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அன்பை பரப்புங்கள். மீடியாக்களும் எனக்கு போன் செய்யாதீர்கள்.

இந்த விஷயத்தை விளம்பரப்படுத்தும் அளவுக்கு பேச எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு வலி இருக்கிறது. ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் தினமும் பிக்பாஸ் குறித்து ரிவ்யூ கொடுத்து வருகிறேன். அப்போது என் முகத்தை நீங்கள் பார்க்கும் போது என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எனது தாக்கப்பட்ட முகத்தை நான் சமூகவலைதளத்தில் ஷேர் செய்தேன்.
என் முகம் இப்படி இருக்கிறது என்பதற்காக நான் உண்மையை சொல்வதிலிருந்து தவிர்க்க முடியாது. என்னை தாக்கியது குறித்து அறிந்ததும் உடனே நடவடிக்கை எடுத்த காவல் துறைக்கு நன்றி. உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் நான் குணமாக வேண்டும். என் உடல்நலம் சரியாகும் வரை என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். அன்பை மட்டும் பரப்புங்கள். இவ்வாறு வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications