பிக்பாஸ் செட்டுகிட்ட கும்மிருட்டு! என்னை தாக்கியவர் யாருனு கூட பார்க்க முடியல! வலியால் துடித்த வனிதா
சென்னை: மிகவும் வலியாக இருக்கிறது. நான் ஓய்வெடுக்க வேண்டும். என்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா கலந்து கொண்டுள்ளார். தற்போது அந்த நிகழ்ச்சி 55 நாட்களை அடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளரான பிரதீப் ஆண்டனி டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவரால் பிக்பாஸ் வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது. பிரதீப் ஆண்டனி மீது ஜோவிகாவும் புகார் கொடுத்திருந்தார். இந்த நிலையில் பிக்பாஸ் ரிவ்யூ செய்த போது ஜோவிகா, மாயா, பூர்ணிமா உள்ளிட்டோரின் உரிமைக் குரல் சரியானது என வனிதா தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து நடிகை வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: என்னை பிரதீப் ஆதரவாளர் முகத்தில் தாக்கியதை அறிந்து பலர் போனிலும் சமூகவலைதளங்களிலும் நலம் விசாரித்தனர். அவர்களுக்கு எனது நன்றிகள். பிக்பாஸ் ஷூட்டிங் முடித்துக் கொண்டு வெளியே வந்த போது இரவு நேரத்தில் இருட்டாக இருந்தது.
என்னால் அந்த இடத்தில் சரியாக பார்க்க கூட முடியவில்லை. அது பழமையான கட்டடம், அங்கு எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லை. ஆனால் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. தயவு செய்து வெறுப்பை பரப்பாதீர்கள் என சிலருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அன்பை பரப்புங்கள். மீடியாக்களும் எனக்கு போன் செய்யாதீர்கள்.

இந்த விஷயத்தை விளம்பரப்படுத்தும் அளவுக்கு பேச எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு வலி இருக்கிறது. ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறேன். நான் தினமும் பிக்பாஸ் குறித்து ரிவ்யூ கொடுத்து வருகிறேன். அப்போது என் முகத்தை நீங்கள் பார்க்கும் போது என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே எனது தாக்கப்பட்ட முகத்தை நான் சமூகவலைதளத்தில் ஷேர் செய்தேன்.
என் முகம் இப்படி இருக்கிறது என்பதற்காக நான் உண்மையை சொல்வதிலிருந்து தவிர்க்க முடியாது. என்னை தாக்கியது குறித்து அறிந்ததும் உடனே நடவடிக்கை எடுத்த காவல் துறைக்கு நன்றி. உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் நான் குணமாக வேண்டும். என் உடல்நலம் சரியாகும் வரை என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். அன்பை மட்டும் பரப்புங்கள். இவ்வாறு வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications