விஏஓ கறார்.. சுப்ரீம் கோர்ட் சபாஷ் தீர்ப்பு.. அரசு பணிக்காக மதம் மாறியோர் மீது நடவடிக்கை தேவை: பாஜக
சென்னை: கிறிஸ்தவ மதத்தை கடைப்பிடிப்பவரை அரசு வேலைக்காக இந்து பட்டியலினத்தவராக அடையாளப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. இந்நிலையில், அரசுப் பணிக்காக மதம் மாறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக மிக முக்கிய கோரிக்கை ஒன்றை வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரியில் அரசு எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்த செல்வராணி என்பவர், தன்னுடைய தந்தை இந்து என்றும், தாய் கிறிஸ்தவர் என்பதால், தான் ஒரு இந்து என்றும் கூறி பட்டியலின சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார். புதுச்சேரியில் அரசு எழுத்தர் பணிக்கு விண்ணப்பித்த செல்வராணி என்பவர், தன்னுடைய தந்தை இந்து என்றும், தாய் கிறிஸ்தவர் என்பதால், தான் ஒரு இந்து என்றும் கூறி பட்டியலின சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார்.

இது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி மேற்கொண்ட விசாரணையில், அவரது தந்தை உட்பட அனைவரும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது தெரியவந்தது. இதனையடுத்து பட்டியலின சான்றிதழ் வழங்க வி.ஏ.ஓ மறுத்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஹைகோர்ட், மனுதாரர் சிறு வயது முதல் கிறிஸ்தவ மதத்தில் பற்றுள்ளவராக இருந்துள்ளதால், சலுகையை பெறுவதற்கான சான்றிதழை கோரியதை ஏற்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இடஒதுக்கீடு: இதனை எதிர்த்து செல்வராணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல், ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த நீதிபதிகள், நம்பிக்கையின்றி இடஒதுக்கீடு பலன்களை பெற மதம் மாறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், அது இடஒதுக்கீட்டின் நோக்கத்தை சிதைக்கும் என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
கிறிஸ்தவ மதத்தை கடைப்பிடிப்பவரை அரசு வேலைக்காக இந்து பட்டியலினத்தவராக அடையாளப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், இதை சுட்டிக்காட்டிய தமிழக பாஜக, அரசுப் பணிக்காக மதம் மாறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
பாஜக கோரிக்கை: இது தொடர்பாக தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ் பிரசாத் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: "இந்து மதத்தில் ஜாதி வேறுபாடுகள் இருக்கின்றன. அதனால் பாதிக்கப்படுபவர்களை கை தூக்கி விடுவதற்காகவே இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது.
ஆனால், "எங்கள் மதத்தில் ஜாதிகளே இல்லை" என்று கூறி மதம் மாற்றுபவர்கள் பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பறித்துக் கொள்வதை ஏற்க முடியாது என்பதை பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை இப்போது உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தி இருக்கிறது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு: மதம் மாறி பல ஆண்டுகள் ஆனவர்கள் கூட, இந்து பட்டியலினத்தவர் என்று சான்றிதழ் பெற்றுக் கொண்டு சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இதனால், உண்மையிலேயே பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், அரசு வேலைக்காக மதம் மாறுவது மோசடி என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
சென்னை மேயர் தேர்தலிலும், பல்வேறு சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டவர்கள் மீது சர்ச்சை எழுந்தது.
அரசு பணிகள்: இது குறித்து தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும். அரசு பணிகளில் பட்டியலினத்தவர் இடஒதுக்கீட்டில் சேர்ந்தவர்களின் சான்றிதழ்களை சரி பார்த்து, அரசு பணிக்காகவே மதம் மாறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பேச்சுக்கு பேச்சு அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் முதல்வர் ஸ்டாலின், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை செயல்படுத்த வேண்டும்" என்று ஏஎன்எஸ் பிரசாத் தன்னுடைய அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதேபோல, இந்து முன்னணியும் கோரிக்கை விடுத்துள்ளது.. "உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு தானாக முன்வந்து தமிழகத்தில் மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள போலி சாதி சான்றிதழ்களை ஆய்வு செய்யவேண்டும் என்றும், அதனடிப்படையில் அரசு வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ள போலி நபர்களை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்றும் உண்மையான பட்டியல் சமுதாய மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை பெற்றுத் தரவேண்டும் எனவும் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications