சூப்பர்.. டெய்லி 150 ஏழைகளுக்கு சாப்பாடு.. வருத்தப்படாத வாக்காளர்கள் சங்கம் அசத்தல்!
சென்னை: சென்னையைச் சேர்ந்த வருத்தப்படாத வாக்காளர்கள் சங்கம் என்ற அமைப்பு லாக்டவுனால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தன்னால் ஆன அருமையான உதவியைச் செய்து வருகிறது.
Recommended Video
லாக்டவுனால் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது சாமானிய மக்கள்தான். தினசரி வேலைக்குப் போய் சம்பாதித்தால்தான் வயிற்றுப் பாடு என்ற நிலையில் இருப்போர்தான் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அவர்களுக்காக பலரும் உதவி வருகின்றன். அப்படி உதவி வருபவர்களை நாம் நம்முடைய வாசகர்களுக்கும் அறிமுகப்படுத்தி ஊக்குவிக்க ஆசைப்பட்டோம்.

அதன் ஒரு பகுதியாக இதோ ஒரு அருமையான உதவிக் கரத்தை உங்களிடம் அறிமுகப்படுத்துகிறோம்.
சென்னையைச் சேர்ந்த வருத்தப்படாத வாக்காளர்கள் சங்கம் என்ற அமைப்பு பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது லாக்டவுனால் பாதிக்கப்பட்ட சாமானியர்களுக்கு சாப்பாடு கொடுத்து உதவுகின்றனர்.

இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவரான ப. விஜயக்குமார் நமக்கு அனுப்பிய மெயிலில், வருத்தப்படாத வாக்காளர்கள் சங்கம், தின்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி மற்றும் அம்மா ஆந்திரா மெஸ் இராயப்பேட்டை, உடன் இணைந்து தினமும் தெருக்கள் மற்றும் சாலைகளில் உள்ள ஏழை மக்களுக்கு தினமும் சுமார் 150 உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
சூப்பர் விஜயக்குமார் நண்பா... மிகப் பெரிய சேவையை செய்றீங்க.. நல்லா பண்ணுங்க.. வாழ்த்துகள்.
எந்த சேவையை விடவும் பெரியது வயிற்று சோறு தருவது. அதை விட பெரிய சேவை இருக்க முடியாது. அந்த வகையில் இந்த சங்கத்தினர் செய்து வரும் இந்த உதவி மிகப் பெரிய சேவை மிகப் பெரிய காரியம். அவர்களை மனதார பாராட்டுகிறோம்.. வாழ்த்துகிறோம்.. இதைப் படிக்கும் நீங்களும் உங்களால் முடிந்த உதவியை செய்தால் எங்களுக்கு பெரு மகிழ்ச்சி.. செய்த உதவியை எங்களிடமும் சொல்லுங்கள்.. நாங்கள் மற்றவர்களிடம் கொண்டு அவர்களையும் ஊக்கப்படுத்துகிறோம்.












Click it and Unblock the Notifications