"இளையராஜா பாவம்.. அவர்கள் திட்டமே இது தான், ஆனால் எதுவும் நடக்காது.." திருமாவளவன் பரபர அட்டாக்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை இளையராஜா புகழ்ந்து பேசி இருந்த நிலையில், இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
அந்த கூட்டத்தில் பாஜக குறித்தும் இளையராஜாவின் கருத்து குறித்தும் தொல். திருமாவளவன் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

சங் பரிவார் கும்பல்
இந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், "இதுவரை அரசியல் ஆதாயத்திற்காக நான் எந்தவொரு முடிவையும் எடுத்ததில்லை. என்றைக்கும் விளிம்பு நிலை மக்களுக்குப் பாடுபட வேண்டும் என்பதற்காகவே பொறுப்பு உணர்வுடன் முடிவுகளை எடுத்து வருகிறேன். வரும் காலத்திலும் இதைத் தொடர வேண்டிய கட்டாயம் உள்ளது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தில் சங் பரிவார் கும்பல் தூண்டுதல் பேரில் மாணவ சமூகம் பிளவுபட்டு உள்ளது.

இஸ்லாமியர்கள்
இஸ்லாம் சமூகத்திற்குப் பிரச்சினை வரும் போது. அதை எதிர்த்து நிற்க வேண்டிய கடமை இஸ்லாமியர்கள் அல்லாத சமூகத்திற்கும் உள்ளது. இஸ்லாமியச் சமூகம் கோபப்பட வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். பாசிசத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் எதிர்வினை ஆற்ற வேண்டும். இவர்களை அம்பலப்படுத்த வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை. இஸ்லாமியர்கள் அமைதி காக்க வேண்டும், ஆத்திரப்படக் கூடாது.

பொறுப்பு
சமூகத்தை இரு வேறு துருவங்களாக பிளவுபடுத்தவே அவர்கள் விரும்புகிறார்கள். அதற்கு நாம் வழி வகுக்கக் கூடாது. இதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இஸ்லாமியர் அல்லாத ஜனநாயக சக்திகளிடம் உள்ளது. சங்பரிவார் கும்பலை எதிர்க்கும் நபர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கிறார்கள். இதை எதிர்கொள்ளக் காங்கிரஸ் போன்ற பெரிய கட்சிகளுக்கே அச்சம் உள்ளது. ஆனால், இவர்களின் அரசியலை அம்பலப்படுத்தும் பொறுப்பு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஜனநாயக சக்திகளிடம் உள்ளது.

இளையராஜா
சமூகத்தில் யார் மக்களோடு மக்களாக நெருக்கமாக உள்ளனரோ, அவர்களைச் சந்திப்பார்கள். இப்படித் தான் ஆர்எஸ்எஸ் காரர்கள் இளையராஜாவைச் சுற்றிவளைத்து இருக்கக்கூடும் என நினைக்கிறேன். அம்பேத்கர் இருந்திருந்தால் நரேந்திர மோடியைப் பாராட்டி இருப்பார் என இளையராஜா சொல்லி இருக்கிறார். இளையராஜா போன்ற நபர்களைக் குறி வைப்பதே அவர்களின் நோக்கம். இளையராஜா பாவம் என்று அவர் மீது இரக்கம் காட்டவே விரும்புகிறேன்.

5 ஆண்டுகள்
அவர் எப்படி விமர்சித்து இருப்பார் எனச் சொல்ல முடியாது. ஆனால், கண்டிப்பாக மோடியை அவரால் சகித்திருக்க முடியாது. அவர் இன்னும் 5 ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால், இந்தியாவின் தலையெழுத்தே மாறியிருக்கும்;. சனாதன கும்பலின் முதல் எதிரி அம்பேத்கர் தான். ஆர்எஸ்எஸ் அரசியலைக் கடைசி வரை மூர்க்கமாக எதிர்த்தவர் தான் அம்பேத்கர்.

தமிழ்நாடு குறி
அவர்கள் இப்போது தமிழ்நாட்டைக் குறிவைத்து விட்டார்கள். இங்கு மாநிலத்தில் இஸ்லாமிய வெறுப்பைத் தீவிரப்படுத்த முயல்கின்றனர். மறுபுறம் கிருத்துவ எதிர்ப்பை கையில் எடுத்து உள்ளனர். விடுதலை சிறுத்தைகளைச் சீண்டினால் கவனம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். பாஜக vs விடுதலை சிறுத்தைகள் என்ற அரசியலை முன்னெடுக்க அவர்கள் முயல்கின்றனர். இதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. இது சமூக நீதி மண், அவர்களைக் காலூன்ற அனுமதிக்கக் கூடாது என்ற கவலையே உள்ளது.
Recommended Video

முதல்வர் ஸ்டாலின்
இப்போது இங்குக் கருணாநிதியும் இல்லை, ஜெயலலிதாவும் இல்லை என்று அவர்கள் தப்புக்கணக்கு போட்டுள்ளனர். ஜெயலலிதா கருணாநிதி என இருவருக்குமான பலத்துடன் பாஜகவுக்குப் பதிலடி கொடுக்கும் வலிமை மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
-
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!












Click it and Unblock the Notifications