Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்களின் குரலாக சிவகார்த்திகேயன்! ‛மாவீரன்’ படத்தை பார்த்து பாராட்டிய திருமாவளவன்! ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‛மாவீரன்' திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், மக்களின் குரலாக சிவகார்த்திகேயனின் படம் இருப்பதாக பாராட்டி தள்ளிய நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் உள்ளார். இவரது நடிப்பில் ‛மாவீரன்' திரைப்படம் உருவாகி தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

 VCK Chief Tirumalavan praised actor Sivakarthikeyan after watching the movie Maveeran

இந்த திரைப்படத்தை மண்டேலா படத்தை இயக்கிய இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கருடன் சேர்ந்து சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளபட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் வழக்கம்போல் காமெடி காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் ஹவுசிங் போர்ட்டில் நடக்கும் பிரச்சனைகள் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகள் அரசியல் பின்புலத்துடனம் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் படம் அரசியல் பேசுவதாகவும் சிலர் தெரிவித்தனர்.

ஆனால் இயக்குனர் மடோன் அஸ்வின், இது ஒரு பேண்டஸி படம் தான். இது அரசியல் சார்ந்த திரைப்படம் இல்லை. இதனை அனைவரும் பார்க்கலாம். தற்போதைய பிரச்சனை பற்றி இந்த படத்தில் குறிப்பிட்டுள்ளோம். இதனை நல்ல கருத்தாக மக்கள் எடுத்துக் கொள்வார்கள் என நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படத்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சென்னையில் பார்த்தார். படம் பார்த்து வெளியே வந்த தொல் திருமாவளவன் மாவீரன் திரைப்படத்தை மனம் திறந்து பாராட்டி உள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் கூறுகையில், ‛‛மக்களின குரலாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் உள்ளது. சென்னை புறநகரில் குடியமர்த்தப்படும் மக்களுக்கு தரப்படும் வீடுகளின் தரம் பற்றி படம் பேசுகிறது'' என பாராட்டி உள்ளார். இதன்மூலம் மாவீரன் திரைப்படத்தில் ஹவுசிங் போர்ட் பிரச்சனை தொடர்பாக இடம் பெற்றது போல் இன்றும் கூட சென்னை புறநகரில் மக்களுக்காக கட்டி கொடுக்கப்படும் வீடுகளில் உள்ளது என்பதை தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+