திமுகவிடம் 15 தொகுதிகளை கேட்ட விசிக? கொளுத்தி போட்ட நயினார் நாகேந்திரன்.. வன்னி அரசு பதிலால் ஷாக்!
சென்னை: திமுகவிடம் விசிக 15 தொகுதிகளை கேட்டு வருவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி இருந்த நிலையில், விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு பதில் அளித்துள்ளார். தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையே தொடங்கப்படாத நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு எங்கிருந்து தகவல் கிடைத்தது என்று தெரியவில்லை என்றும் கூறி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன. ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில், திமுக கூட்டணி அப்படியே தொடர்ந்து வருகிறது. இதனிடையே பாஜக தலைவர்கள், திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறி வருகின்றனர்.

திருமாவளவன் - வைகை செல்வன் சந்திப்பு
அதற்கேற்ப அதிமுக தலைவர் வைகை செல்வனை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்திருந்தார். ஆனாலும் பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியில் விசிக இணையாது என்பதையும் தெளிவுப்படுத்தி இருக்கிறார். இதனிடையே திமுக கூட்டணியில் விசிக 15 தொகுதிகளை கேட்டு வருவதாக நயினார் நாகேந்திரன் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வன்னி அரசு பேட்டி
இந்த நிலையில் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மதவாத பாஜகவும், சாதியவாத பாமகவும் இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம். அதேபோல் திமுக அணியில் ஏன் விசிக தொடர்கிறது என்பதையும் திருமாவளவன் விளக்கி இருக்கிறார். அதிமுக பக்கம் ஏன் போகக் கூடாது என்று பலரும் கேள்வி கேட்டதால், தான் பாஜக இருக்கிறது என்பதை கூறினார்.
பாமக, பாஜக விவகாரம்
விசிகவுக்கு கூட்டணி வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் ஏற்கனவே கொள்கை கூட்டணியாக திமுகவுடன் இருக்கிறது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கிய பங்கு விசிகவுக்கும் உள்ளது. சீட் பேரத்திற்காக பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஆனால் அது விசிகவுக்கு தேவையில்லை. எங்களுக்கு வேறு கட்சியை நாடி செல்ல வேண்டிய தேவை இல்லை.
வருத்தம்
இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வம் எங்களுக்கு அதிகமாகவே உள்ளது. கடந்த முறை திமுக கூட்டணியில் இடம்பெற்று 6 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது வருத்தம் தான். இம்முறை கூடுதல் தொகுதிகளை பெறுவது அனைவரின் விருப்பம். எங்களுக்கு 50 தொகுதிகளில் கூட போட்டியிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
நயினார் நாகேந்திரனுக்கு பதில்
ஆனால் திருமாவளவன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதன்பின்னரே எங்களுக்கு தெரிய வரும். அதனால் கூட்டணி, எண்ணிக்கை தொடர்பாக திருமாவளவன் பேச்சுவார்த்தை செய்து கொள்வார். நயினார் நாகேந்திரனுக்கு எங்கிருந்து 15 தொகுதிகளை விசிக கேட்பதாக தகவல் கிடைத்தது என்று தெரியவில்லை. ஏனென்றால் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. 15 தொகுதிகள் என்று நயினார் நாகேந்திரன் சொல்வதே எங்களை குறைத்து மதிப்பிடுவதாக பார்க்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications