Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவிடம் 15 தொகுதிகளை கேட்ட விசிக? கொளுத்தி போட்ட நயினார் நாகேந்திரன்.. வன்னி அரசு பதிலால் ஷாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவிடம் விசிக 15 தொகுதிகளை கேட்டு வருவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி இருந்த நிலையில், விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு பதில் அளித்துள்ளார். தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையே தொடங்கப்படாத நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு எங்கிருந்து தகவல் கிடைத்தது என்று தெரியவில்லை என்றும் கூறி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன. ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில், திமுக கூட்டணி அப்படியே தொடர்ந்து வருகிறது. இதனிடையே பாஜக தலைவர்கள், திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறி வருகின்றனர்.

VCK Denies BJP Leader s Claim on Seat-Sharing Talks with DMK

திருமாவளவன் - வைகை செல்வன் சந்திப்பு

அதற்கேற்ப அதிமுக தலைவர் வைகை செல்வனை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்திருந்தார். ஆனாலும் பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியில் விசிக இணையாது என்பதையும் தெளிவுப்படுத்தி இருக்கிறார். இதனிடையே திமுக கூட்டணியில் விசிக 15 தொகுதிகளை கேட்டு வருவதாக நயினார் நாகேந்திரன் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வன்னி அரசு பேட்டி

இந்த நிலையில் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மதவாத பாஜகவும், சாதியவாத பாமகவும் இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம். அதேபோல் திமுக அணியில் ஏன் விசிக தொடர்கிறது என்பதையும் திருமாவளவன் விளக்கி இருக்கிறார். அதிமுக பக்கம் ஏன் போகக் கூடாது என்று பலரும் கேள்வி கேட்டதால், தான் பாஜக இருக்கிறது என்பதை கூறினார்.

பாமக, பாஜக விவகாரம்

விசிகவுக்கு கூட்டணி வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் ஏற்கனவே கொள்கை கூட்டணியாக திமுகவுடன் இருக்கிறது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கிய பங்கு விசிகவுக்கும் உள்ளது. சீட் பேரத்திற்காக பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஆனால் அது விசிகவுக்கு தேவையில்லை. எங்களுக்கு வேறு கட்சியை நாடி செல்ல வேண்டிய தேவை இல்லை.

வருத்தம்

இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வம் எங்களுக்கு அதிகமாகவே உள்ளது. கடந்த முறை திமுக கூட்டணியில் இடம்பெற்று 6 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது வருத்தம் தான். இம்முறை கூடுதல் தொகுதிகளை பெறுவது அனைவரின் விருப்பம். எங்களுக்கு 50 தொகுதிகளில் கூட போட்டியிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

நயினார் நாகேந்திரனுக்கு பதில்

ஆனால் திருமாவளவன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதன்பின்னரே எங்களுக்கு தெரிய வரும். அதனால் கூட்டணி, எண்ணிக்கை தொடர்பாக திருமாவளவன் பேச்சுவார்த்தை செய்து கொள்வார். நயினார் நாகேந்திரனுக்கு எங்கிருந்து 15 தொகுதிகளை விசிக கேட்பதாக தகவல் கிடைத்தது என்று தெரியவில்லை. ஏனென்றால் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கப்படவில்லை. 15 தொகுதிகள் என்று நயினார் நாகேந்திரன் சொல்வதே எங்களை குறைத்து மதிப்பிடுவதாக பார்க்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+