பத்தாண்டு பாழான காலம்! இந்தியா மீளும்..இந்தியா கூட்டணி ஆளும்! ரிசல்ட் நாளில் திருமா போட்ட ட்வீட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவை இந்தியாவே ஆளும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான திருமாவளவன் இந்தியா கூட்டணி நாட்டை ஆளும் என நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அனைத்து தொகுதிகளிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Result 2024 Thirumavalavan vck 2024 2024

தற்போது தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிவில் தமிழகத்தில் திமுக கூட்டணியே முன்னணி வகிக்கிறது தேசிய அளவில் பாஜக 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்புகள் இருக்கும் நிலையில் மத்தியில் இந்தியா கூட்டணியின் வெற்றி வாய்ப்பு கவலைக்குரியதாகவே இருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவை இந்தியாவே ஆளும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான திருமாவளவன் இந்தியா கூட்டணி நாட்டை ஆளும் என நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Result 2024 Thirumavalavan vck 2024 2024

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"கடந்த காலம்!-நாட்டைக் காரிருள் சூழ்ந்த காலம்! பரிவார் கும்பலால்- உரிமைகள் பறிபோன காலம்! பத்தாண்டு காலம்! - நாடு பாழான காலம்! இன்று- இருள் விலகும்!- சனநாயக ஒளி பரவும்! இந்திய நாடு மீளும்! - நம் இந்தியா கூட்டணி ஆளும்!" என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+