ரஜினிகாந்த் யாரை வேண்டுமானாலும் பார்க்கட்டும்.. ஆனால்.. ஒரு சிக்கல்.. விளாசி தள்ளிய திருமாவளவன்!
சென்னை: நாடு முழுவதும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்க வழிகாட்டும் நிலைப்பாடாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் நடவடிக்கை அமைய வேண்டும் என விசிக எம்.பியும் அக்கட்சியின் தலைவருமான திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதேபோல "ரஜினி யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம் ஆனால், ஆளுநர் தனது பொறுப்பை மீறி செயல்பட்டு வருகிறார்" என விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், டெல்லியிலிருந்து சென்னை திரும்பி அவர், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், "ஆளுநர் ஆர்.என்.ரவி முழுநேர அரசியல்வாதியாக செயல்படுகிறார்" என்றும் திருமாவளவன் எம்.பி குற்றம்சாட்டியுள்ளார். அவருடைய அரசியல் கடமை மாநில-மத்திய அரசுகளுக்கு இணைக்க போக்கை உருவாக்க வேண்டியதுதான். ஆனால் அவர் ஆர்எஸ்எஸ்.காரராக முழு நேர அரசியல்வாதியாக செயல்படுகிறார். ஆளுநரின் போக்குகள் மாநில அரசுக்கு மட்டுமல்ல தேசிய அளவில் ஜனநாயகத்திற்கு முரணாக சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக இருப்பது கவலை அளிக்கிறது" எனக்கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் எதிர்க்கட்சிகளின் குரல் வளையை நெறிக்க கூடியதாக ஜனநாயகத்தை நசுக்க கூடியதாக இருந்தது. வரும் 12ம் தேதி வரை கூட்ட தொடரை நடத்தாமல் 4 நாட்களுக்கு முன்னதாக நிறைவு செய்து விட்டார்கள். பாஜக அரசு ஒரு பாசிச அரசு என்பதற்கு அவையின் எதேச்சதிகாரங்கள் சான்றாக இருந்தன. 4 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த போது எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தம் காரணம் திரும்ப பெற்றனர்.
மாநிலங்களவை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 18 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அந்த வகையில் ஜனநாயகத்தை நெறிக்க கூடிய கூட்டத் தொடராக இந்த மழைக்கால கூட்டத்தொடர் இருந்தது. எதிர்க்கட்சிகளின் கருத்துகளை கேட்காமல் எதிர்ப்புகளை மீறி சில மசோதாக்களை ஆளும் பாஜக அரசு நிறைவேற்றி கொண்டது. அதில் முக்கியமானது மின்சார திருத்த சட்ட மசோதா. மின்சார விநியோக உரிமையை தனியாருக்கு விடும் இந்த மசோதாவை விசிக கடுமையாக எதிர்க்கிறது.
பீகாரில் பாஜகவுக்கு ஒரு அச்சுறுத்தல் தரக்கூடிய வகையிலும் தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைக்க ஒரு ஆச்சாரமாக இருக்க கூடிய வகையில் நிதிஷ் குமார் எடுத்து உள்ள முடிவு வரலாற்று சிறப்புமிக்கதாக உள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து விலகி புதிய கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கிறார் நிதிஷ் குமார். ஜனநாயகத்தை உயிர்ப்பிக்கும் கூட்டணியாக இது விளங்குகிறது. இந்தியா முழுவதும் இது போல் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைக்க வழி காட்டும் நிலைப்பாடாக இது அமைய வேண்டும்" எனக் கூறினார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications