சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக்குக... முதல்வரை சந்தித்து திருமா வலியுறுத்தல்
சென்னை: சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி., முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை சந்தித்து பேசிய திருமாவளவன் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தச் சந்திப்பு அரசியல் களத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முதல்வரிடம் கோரிக்கை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் திருமாவளவன் சந்தித்து பேசிய போது, சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும், துணைத் தலைவர் பதவிகளில் இட ஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார்.

ஆயிரம் கேள்விகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் திருமாவளவனும் சந்தித்து பேசியது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுவதுடன் அரசியல் களத்தில் புதிய புதிய கேள்விகளையும், ஐயங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

அவசரம் ஏன்?
உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதியை போட்டியிட வேண்டும் எனக்கூறி இளைஞரணி நிர்வாகிகள் விருப்பமனு அளித்துள்ள நிலையில், அதனை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளார் திருமா. இது திமுகவுடன் அவருக்கு மன வருத்தம் ஏற்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

திருமா பேட்டி
முதலமைச்சரை சந்தித்து பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தனது கோரிக்கை அடங்கிய மனுவை பரிசீலிப்பதாக முதல்வர் கூறியதாக தெரிவித்தார். மேலும், தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி தொடர்பாகவும் கோரிக்கை வைத்ததாக கூறினார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications