#BoosterVaccine.. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி.. திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கை
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என திருமாவளவன் மனு அளித்துள்ளார்
சென்னை: ஒமிக்ரான் தொற்று பரவலை கருத்தில் கொண்டு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் மத்திய அமைச்சரிடம் கடிதம் அளித்துள்ளார்.
நம் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் ஒரு பக்கம், ஒமிக்ரான் வைரஸ் தாக்கம் மறுபக்கமும் படுவேகமாக பரவி வருகிறது...
எனவே, ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டவர்களுக்கு, பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்த வேண்டும் என்று டாக்டர்களும், ஆராய்ச்சியாளர்களும் பரிந்துரை செய்து வருகின்றனர்.

திருமாவளவன்
இந்த நிலையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்க கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பி திருமாவளவன் கடிதம் அளித்துள்ளார்.. அந்த கடிதத்தில்உள்ளதாவது: "மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தபடி ஓமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. டெல்லியில் "சீக்வென்ஸ்" செய்யப்பட்ட கோவிட் மாதிரிகளில் 46% மாதிரிகள் ஓமிக்ரான் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இணை நோய்
ஜனவரி 2022 இறுதிக்குள் இந்தியாவில் நாளொன்றுக்கு 1.5 லட்சம் புதிய நோய்த்தொற்று இருக்கும் என்று தரவு விஞ்ஞானிகளின் மதிப்பீடு உண்மையாகி வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணைநோய் உள்ளவர்களுக்கும் "பூஸ்டர் டோஸ்" கொடுக்கலாம் எனப் பிரதமர் அறிவித்துள்ளார். நாங்கள் அதை வரவேற்றாலும், கடந்த டெல்டா அலையின் போது இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதைத் தங்களது கவனத்துக்கு சுட்டிக்காட்டுகிறோம்.

தடுப்பூசி
"நாட்டில் ஏற்படும் கோவிட்-19 இறப்புகளில் சுமார் 88 சதவிகிதம் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு நிகழ்கின்றன. அவர்களே அதிகம் பாதிக்கப்படக்கூடிய குழுவாக உள்ளனர்" என்று மத்திய சுகாதார செயலாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். எனவே, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு "பூஸ்டர் டோஸ்" கொடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ஒமிக்ரான்
ஓமிக்ரான் நோய்த்தொற்றைத் தடுப்பதில் அதிக வீரியம் உள்ள எம்ஆர்என்ஏ தடுப்பூசியை "பூஸ்டர் டோஸாக" வழங்க அனுமதிக்குமாறு மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்திலும் திருமாவளவன் பதிவிட்டுள்ளார்.. மத்திய அமைச்சரிடம் தரப்பட்டுள்ள இந்த மனுவானது விரைவில் பரிசீலனை செய்யப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
-
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
இது திமுக பண்ணையார்தனம்.. திருமாவளவன் கண்ணீர் தான் விடவில்லை.. கோர்த்துவிட்ட ஆதவ் அர்ஜுனா -
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications