வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் திருச்சியில் நடத்திய நன்றி அறிவிப்புக் கூட்ட உரை, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. சட்டமன்றத்தில் பேசாமல் பொதுவெளியில் ஆவேசம் காட்டும் விஜய்யின் இந்தச் செயல்பாட்டை, திமுக உள்ளிட்ட மாற்று கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, மக்கள் பிரச்சனைகளில் முதலமைச்சர் தொடர்ந்து மவுனம் காப்பதாக திராவிட கழக தலைவர் கி.வீரமணி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தற்போது தமிழக அரசியலில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

தனக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த திருச்சி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும் பிரம்மாண்ட விழா சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய சில கருத்துக்கள், தற்போது தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

Veeramani

திருச்சி விஜய் கூட்டம்

குறிப்பாக, சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்களை மக்கள் கூட்டத்தில் முதலமைச்சர் பேசுவது ஏன் என்றும், பாலியல் வன்கொடுமைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், விஜய்யின் இந்த மேடைப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து திமுவகைச் சேர்ந்த பிரபல பேச்சாளர் ஐ.லியோனி, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கூர்மையான கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் திணறிய முதலமைச்சர் விஜய், அந்த இயலாமையை மறைக்கவே திருச்சி பொதுக்கூட்ட மேடையில் ஆவேசமாகப் பேசியுள்ளார் என்று லியோனி குற்றம்சாட்டியுள்ளார்.

ராசா, அன்புமணி, லியோனி விமர்சனம்

ஒரு முதலமைச்சருக்குரிய இலக்கணம் இல்லாமல், மேடைகளில் தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசுவதை மக்கள் ரசிக்கவில்லை, காகிதத்தைப் பார்த்துப் படிக்கும் ஒருவரை ஏன் தேர்ந்தெடுத்தோம் என பொதுமக்கள் வருந்தத் தொடங்கிவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல பாமக அன்புமணி ராமதாஸ் கூறும்போது, திருச்சியில் நடந்தது அரசு விழா அல்ல... அரசியல் நிகழ்ச்சி தான் என்றாலும், முதலமைச்சராக விஜய் பங்கேற்றும் முதல் பொது மேடை என்பதால், தமிழ்நாட்டுக்காக அவர் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு எதிராகவே அவரது உரை அமைந்திருந்தது என்று விமர்சித்துள்ளார்.

அதேபோல திமுகவின் ஆ ராசா பேசும்போது, "தமிழ்த்தாய் வாழ்த்துக்காக நீங்கள் போய்க் கெஞ்சி இருக்கிறீர்கள். இதுதான் உங்கள் வீரமா? விஜய் ப்ரோ, உங்க சக்தி பிரதமர் முன்னாடி எங்க ப்ரோ போச்சு?" என்று காரசாரமாக கேட்டிருந்தார்.

கி.வீரமணி காட்டம்

இந்நிலையில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும், விஜய்யின் திருச்சி பேச்சை விமர்சித்துள்ளார்.. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மூத்த தலைவர் வீரமணி, "முதல்வராக இருக்கும் விஜய்யின் முதல் பேச்சு திருச்சியில் துவங்கியது. ஆனால் இதில் வருத்தப்பட கூடிய விஷயம் என்னவென்றால், அவர் தான் இப்போது முதலமைச்சராக இருக்கிறோம் என்றே நினைவில் கொள்ளாமல், முழுக்க முழுக்க பழைய நினைப்பில் அதாவது தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவதை போலவே பேசியிருப்பது பலரின் முகச்சுளிப்பிற்கு ஆளாகி உள்ளது.

ஆட்சியின் கொள்கை என்ன

அரசியல் தெளிவுள்ளவர்களால் ஏற்று கொள்ள முடியாததாக அவரின் திருச்சி பேச்சு அமைந்துள்ளது. முதல்வர் இதுபோன்ற பேசும் போக்கை மாற்றி கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் சொல்வது அறிவுரை அல்ல. ஆளும் கட்சியாக இருந்த ஒரு கட்சி, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக இருப்போம் என்று சொல்கிறது.

அதனால் எதிர்க்கட்சிகள் என்னென்ன குறைகள் சொல்கிறார்களோ அவற்றை உன்னிப்பாக கேட்டு, ஆராய்ந்து அதற்குரிய பதிலையும், தன் ஆட்சியினுடைய கொள்கை என்ன என்பதையும் மக்களுக்கு விளக்குவது தான் முதல்வரின் முக்கியமான கடமை. அந்த வகையில் முதல்வரின் திருச்சி பேச்சு மக்களுக்கு மாற்றத்தை தரவில்லை, ஏமாற்றத்தையே தந்திருக்கிறது" கி.வீரமணி தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+