இங்கே இருந்த ஏரி எங்கேப்பா.. வியக்க வைக்கும் வேளச்சேரி மேப்! இப்படி இருந்தால் ஏன் வெள்ளம் வராது?
சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான வேளச்சேரி ஒரு காலத்தில் முழுக்க, ஏரியாக இருந்த பகுதி , என்பதற்கான வரைபட தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றிவருகிறது.
ஒரு காலத்தில் கிராமமாக இருந்த பகுதிதான் சென்னை. அப்போது இங்கு நிறைய ஏரிகளும், குளங்களும் இருந்தன. ஆனால், சென்னை ஒரு பெரிய நகரமாக மாறிய பிறகு அந்த ஏரிகள் வேகமாக பட்டா போடப்பட்டு குடியிருப்பு பகுதிகளாக மாற்றம் செய்யப்பட்டன.
தற்போது சென்னை அதன் முழு கொள்ளளவை தாண்டி இரண்டு மடங்கு மக்கள் தொகையுடன் விழிபிதுங்கி நிற்கிறது.

வீடுகளுக்குள் தண்ணீர்
இப்போது மழை வரும்போது ஏரிகள் இருந்த பகுதிகளில் வெள்ளநீர் செல்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் வந்துவிட்டது என்று அந்த பகுதியில் வசிக்கும் மக்களும் சொல்கிறார்கள் . இதுதான் தொடர்கதையாக நடந்து வருகிறது. சென்னை நகரப் பகுதிக்குள் உள்ள மேற்கு மாம்பலம் பகுதியில் லேக் வியூ சாலை இன்னமும் கூட இருக்கிறது. ஆனால் ஏறி எங்கே இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது.

கொளத்தூர் ஏரி குட்டையானது
இப்படித்தான் கொளத்தூர் பகுதியில் இருந்த ஏரி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குட்டை போல தற்போது, மாறிவிட்டது. இது ஒரு பக்கம் என்றால் வேளச்சேரி ஏரி என்று 1980ஆம் ஆண்டு சென்னை வரைபடத்தில் இருந்த பகுதியில் தற்போது முழுக்க முழுக்க கட்டிடங்களாக காணப்படுகிறது. 1996 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தில் வேளச்சேரி ஏரி முக்கால்வாசிக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ஏரியின் ஒரு சில பகுதிகள் மட்டுமே இருப்பதாக தெரிகிறது. வேளச்சேரி இப்போது வெள்ளத்தில் மிதக்கும் சந்தர்ப்பத்தில் இந்த புகைப்படம் வைரலாக சுற்றி வருகிறது.

பள்ளிக்கரணை செல்ல வேண்டும்
அந்த காலத்தில், வேளச்சேரி ஏரியில் உள்ள தண்ணீரானது இந்த விளைநிலங்கள் வழியாக பாய்ந்து சென்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு சென்று அங்கிருந்து ஒத்தியம்பேட்டை வழியாக கடலில் கலக்கும். இது தான் இயல்பாக இருந்துள்ளது. ஆனால் தற்போதைய காலத்தில் விளை நிலங்கள் அனைத்தும் குடியிருப்புகளாக மாறிவிட்டதால், மழைகாலத்தில் அங்கு மழைநீர் தேங்கி வெள்ளக் காடாக மாறுகிறது.

வேளச்சேரி மக்கள்
2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின்போது வேளச்சேரி பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் சென்ற மழைநீரால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் அனைத்தும் மூழ்கின. எனவே, அதன்பிறகு, சென்னையில் எப்போது கன மழை பெய்தாலும், வேளச்சேரி பகுதி மக்கள், வேளச்சேரி பாலத்தின் ஓரத்தில் வரிசையாக தங்களுடைய நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இப்போதும் அதைத்தான் செய்துள்ளனர்.
-
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications