ஆஹா! மொத்தமாக மாறப்போகும் சென்னை பறக்கும் ரயில் நிலையங்கள்.. மினி ஷாப்பிங் மால், பார்க்கிங் வசதி
சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை உள்ள ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் என்றும், இந்த நிலையங்களில் மினி ஷாப்பிங் மால்கள், கேமிங் ஆர்கெட்ஸ் ஆகியவை அமைக்கப்படும் என்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம்(CUMTA) தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. போக்குவரத்து நெரிசலால் திண்டாடும் வாகன ஓட்டிகள், பொது போக்குவரத்தில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுவதை காண முடிகிறது. அதிலும் பீக் நேரங்களில் மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டத்தால் ரயில்கள் நிரம்பி வழிகிறது.

சென்னையில், தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை கடற்கரை - தாம்பரம், செங்கல்பட்டு, கடற்கரை- வேளச்சேரி, சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை ஆகிய முக்கிய வழித்தடங்கள் இருக்கின்றன. கடந்த 1997ஆம் ஆண்டு பறக்கும் ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. சென்னை கடற்கரை- மயிலாப்பூர் வரை முதற்கட்டமாக தொடங்கப்பட்டது.
பறக்கும் ரயில்: இதற்கு பயணிகள் இடையே வரவேற்பு கிடைத்ததை அடுத்து, அடுத்த கட்டத்திற்கு ரயில் சேவை விரிவுப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மயிலாப்பூரில் இருந்து வேளச்சேரி வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. 2008-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சிந்தாரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையில் மேம்பாலங்கள் வழியே இந்த ரயில்கள் இயக்கப்படுவதால் பறக்கும் ரயில் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
ரூ.85 கோடி நஷ்டம்: சென்னை கடற்கரையில் இருந்து 4 வது வழித்தடம் அமைக்கும் பணிகள் நடப்பதால் தற்போது சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு ரயில்கள் இயக்கப்படுவது இல்லை. சிந்தாதிரிப்பேட்டை- வேளச்சேரி இடையேதான் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தை பொறுத்தவரை கமந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபா நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன.
ரயில் நிலையங்களில் 1 முதல் 4 தடங்கள் கொண்ட ரயில் நிலையங்களாக தற்போது இந்த ரயில் நிலையங்கள் உள்ளன. இங்கு 20,44,400 சதுர மீட்டர் அளவில் இடங்கள் உள்ளன. சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான ரயில் இயக்கம், பராமரிப்பு என இந்த சேவைக்காக தற்போது ஆண்டுக்கு ரூ.105 கோடி செலவு ஆகிறது. வருவாய் வெறும் 20 கோடி மட்டுமே கிடைப்பதால் ஒவ்வொரு ஆண்டும் தெற்கு ரயில்வேக்கு ரூ.85 கோடி நஷ்டம் ஏற்படுகிறது.
2025-ம் ஆண்டில்: சென்னை கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை கையகப்படுத்தி தமிழக அரசு மூலம் இந்த ரயில் சேவையை இயக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக விரிவான வணிக திட்ட அறிக்கையை தமிழக அரசு தயார் செய்து வருகிறது. வணிக திட்ட அறிக்கையை தயார் செய்ய டெண்டரும் வழங்கப்பட்டுள்ளது. வணிக திட்ட அறிக்கை ஜனவரி மாதம் இறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டு இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால் வரும் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் பறக்கும் ரயில் சேவையை முழுமையாக கையப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. டிக்கெட் விற்பனை மூலம் மட்டும் இன்றி பிற சேவைகள் மூலமாகவும் வருவாயை பெருக்க திட்டமிட்டப்பட்டுள்ளது.
மினி ஷாப்பிங் மால்கள்: அதாவது, ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதி, வணிக வளாகங்கள், உணவகங்கள் ஆகியவற்றையும் அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம்(CUMTA) அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுவதாவது:- சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை உள்ள ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.
இந்த ரயில் நிலையங்களில் ஷாப்பிங் மால்கள், உணவு விடுதிகள், பார்க்கிங் வசதிகள் உள்ளிட்டவை செய்யப்படும். வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர் ஆகிய எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில் வணிக சேவையை செயல்படுத்த முதல் கட்டமாக அடையாளம் கண்டுள்ளோம். இந்த ரயில் நிலையங்களில் மினி ஷாப்பிங் மால்கள், கேமிங் ஆர்கெட்ஸ் ஆகியவை அமைக்கப்படும்" என்றனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications