பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்போன் கொண்டு வர தடை.. மீறினால்.. வேலூர் ஆட்சியர் வார்னிங்
சென்னை: பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்போனை கொண்டு வந்தால் மாணவர் மீதும் பெற்றோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வேலூர் தொரப்பாடியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 800 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் சிலர் கடந்த 23 ஆம் தேதி வகுப்பறையில் உள்ள இரும்பு மேஜை, நாற்காலி ஆகியவற்றை தரையில் போட்டு அடித்து நொறுக்கினர்.
மேலும் அவற்றின் மீது ஏறி நின்றும் உடைத்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலானது. பள்ளியில் பிரிவு உபசார விழாவுக்கு அனுமதி அளிக்காததால் பிளஸ் 2 மாணவர்கள் 10 பேர் இவ்வாறு பொருட்களை உடைத்ததாக தெரிகிறது.

10 மாணவர்கள் சஸ்பெண்ட்
இது தொடர்பாக புகாரின் பேரில் அந்த 10 மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அடுத்த மாதம் மே 4 ஆம் தேதி வரை பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களால் உடைக்கப்பட்ட பொருட்களுக்கு அவர்களுடைய பெற்றோர் இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.

பள்ளி வகுப்பறைக்குள் செல்போன் கூடாது
இந்த நிலையில் பள்ளி வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்போன் கொண்டு வரக் கூடாது என வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இன்று உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறி வகுப்பறைக்குள் செல்போன் கொண்டு வந்தால் மாணவர்கள் மீதும் அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பத்தூரில் ஆசிரியரை மிரட்டிய மாணவர்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் தாவரவியல் ஆசிரியராக பணிபுரியும் சஞ்சய் என்பவரை அடிக்க கை ஓங்கி அவரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி தீர்த்த மாணவன் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அந்த மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

நல்வழிப்படுத்த கோரிக்கை
அண்மைக்காலமாக பள்ளிகளில் மாணவர்கள் இது போன்று ஆசிரியர்களிடம் தவறாக நடந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருகிறது. சென்னையில் ஒரு பள்ளியில் ஆசிரியரை மாணவர் ஒருவர் கொலை செய்யும் சம்பவத்தையும் நாம் அறிவோம். இது போன்ற மூர்க்க குணம் உள்ள மாணவர்களுக்கு கவுன்சலிங் தேவை என்றும் அனைத்து பள்ளிகளிலும் உள்ள மாணவர்களுக்கு நன்னடத்தை வகுப்புகளை எடுத்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications