ரஜினி ஏன் நிஜ வாழ்க்கையிலும் இப்படி நடிக்கிறார்?.. வேல்முருகன் கடும் கண்டனம்
நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் பேட்டி கொடுத்து பிரச்சனையில் சிக்கி இருக்கிறார். நேற்று அவர் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

அதில் அவரிடம் ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றிருக்கும் 7 தமிழர்களின் விடுதலை குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர் , யார் அந்த 7 பேர். 7 பேரின் விடுதலை குறித்து எனக்கு தெரியாது. அதுகுறித்து இப்போதுதான் கேள்விப்படுகிறேன், என்று கூறியுள்ளார்.
பலர் ரஜினிக்கு எதிராக இதனால் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவரின் இந்த கருத்து பெரிய விவாதத்தை உருவாக்கியது.
இந்த நிலையில் ரஜினியின் பேட்டிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஜினி மக்களை ஏமாற்றுகிறார் என்று வேல்முருகன் பேட்டியளித்துள்ளார்.
அவர் தனது பேட்டியில், ரஜினி திரையில் நடிப்பது போல் நடிக்கிறாரா?. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் யார் என்று தெரியாதது போல ரஜினி நடிக்கிறார்.
ரஜினிகாந்த் மக்களை ஏமாற்ற பார்க்கிறார். தமிழர்களின் அடிப்படை பிரச்சனை கூடவா அவருக்கு தெரியாமல் இருக்கும்.
தமிழகத்தின் பல பிரச்சனைக்கு ரஜினி செவிசாய்க்கவில்லை. பச்சை தமிழன் என்று பேசிவிட்டு தமிழகத்துக்கு என்ன செய்ய போகிறார் ரஜினி என்று வேல்முருகன் கூறியுள்ளார்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்!












Click it and Unblock the Notifications