பாவம் அவர்கள்; கைவிட்டுவிட வேண்டாம்; அரசுக்கு வேல்முருகன் வேண்டுகோள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா காலத்தில் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் உட்பட மருத்துவப் பணியாளர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கை தனக்கு மிகுந்த வேதனையை தருவதாக தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கொரோனாவின் பாதிப்பு தமிழ்நாட்டில் அதிகளவில் இருந்தபோது, தற்காலிகமாக மருத்துவர்களும், செவிலியர்களும் , சுகாதார ஆய்வாளர்களும், மருத்துவப் பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர். ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட அவர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சிறந்த முறையில் சேவையாற்றினர்.
செவிலியர்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உறவினர்களே செல்ல தயங்கி நிலையில், பாதிக்கப்பட்டவர்களிடம் தாயுள்ளதோடு செயலாற்றியவர்கள் மருத்துவர்களும், செவிலியர்களுமே. மேலும், சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், டெங்கு போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்களும், செவிலியர்களும் சிறந்த முறையில் செயலாற்றியுள்ளனர்.

மருத்துவர்கள் செவிலியர்கள்

மருத்துவர்கள் செவிலியர்கள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உறவினர்களே செல்ல தயங்கி நிலையில், பாதிக்கப்பட்டவர்களிடம் தாயுள்ளதோடு செயலாற்றியவர்கள் மருத்துவர்களும், செவிலியர்களுமே. மேலும், சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்ட நிலையில், டெங்கு போன்ற நோய் தடுப்பு நடவடிக்கைகளிலும் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்களும், செவிலியர்களும் சிறந்த முறையில் செயலாற்றியுள்ளனர்.

வேதனை

வேதனை

அவர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படாத இச்சூழலில், இம்மாத இறுதியுடன் பணியில் இருந்து நின்று விடுமாறு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, எழுத்துப் பூர்வமாகவும், வாய்மொழியாகவும் அவர்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இத்தகையை நடவடிக்கை பெரும் வேதனையை ஏற்படுத்துகிறது.

3-வது அலை

3-வது அலை

கொரோனா மூன்றாவது அலைக்கான எச்சரிக்கையை நிபுணர்கள் விடுத்த நிலையில், ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வது அதிர்ச்சி அளிக்கிறது.எனவே, ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவப் பணியாளர்களை பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும். பல மாதங்களாக நிலுவையில் உள்ள அவர்களின் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+