என்னை மதிக்கவில்லை.. புலம்பும் வேல்முருகன்! புறக்கணிக்கிறதா திமுக.. சைலன்ட் மோடில் சீனியர் அமைச்சர்
சென்னை: திமுக கூட்டணியில், தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகனால் புதிய பஞ்சாயத்து கிளம்பியிருக்கிறது. இந்த முறை வேல்முருகன் கூட்டணியில் தொடர்வாரா? என்பதே கேள்விக்குறியாகியிருக்கிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்க, நெருங்க நிலையில் கூட்டணிக்குள் சலசலப்புகளும் அதிகரித்திருக்கின்றன. இந்த முறை வேல்முருகனால் பஞ்சாயத்து எழுந்திருக்கிறது.

கடந்த 8 வருடமாக தி.மு.க கூட்டணியில் இருக்கும் வேல்முருகன், வரும் தேர்தலிலும் அறிவாலயத்துடன் கூட்டணி தொடரும் என்று பேசிவந்தார். சீட் பங்கீடு தொடர்பாக சீனியர் அமைச்சர் ஒருவர் வேல்முருகன் தரப்பிடம் பேசியபோது, 'நெய்வேலி, கடலூர் தொகுதிகள் வேண்டும். தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம்' என்று பல்வேறு நிபந்தனைகளை விதித்திருக்கிறார். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட அந்த சீனியர் அமைச்சர் எதுவுமே பதில் சொல்லவில்லையாம்.
அதில் அப்செட்டான வேல்முருகன், சென்னையில் முதல்வர் பங்கேற்ற கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், அந்நிகழ்ச்சிக்குச் செல்லவில்லை. அதேபோல, வள்ளுவர் கோட்டத்தில் உதயநிதி கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியையும் புறக்கணித்திருக்கிறார். இதற்கிடையே, 'கூடுதல் தொகுதி ஒதுக்கவில்லை என்றால் கூட்டணியிலிருந்து த.வா.க வெளியேறும்' என்று நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதால், கூட்டணிக்குள் சலசலப்பு தீவிரமடைந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications