Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"நீட் சமூக அநீதி தேர்வு! கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்" -வேல்முருகன் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் விலக்கு தொடர்பாகத் தமிழக சட்டசபையில் சிறப்புக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், பண்ருட்டி வேல்முருகன் சட்டசபையில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்

நீட் பாதிப்பு குறித்து ஏகே ராஜன் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட நீட் விலக்கு மசோதா கடந்த செப். 13ஆம் தேதி தமிழக சட்டசபையில் முழு மனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் அனுப்பப்பட்டது.

சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு, இந்த நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதையடுத்து இந்த மசோதாவை மீண்டும் நிறைவேற்றச் சிறப்புச் சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெறுகிறது.

 பண்ருட்டி வேல்முருகன்

பண்ருட்டி வேல்முருகன்

இன்று நீட் விலக்கு மசோதாவில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் சட்டசபையில் பேசுகையில், "சமூகநீதியின் பிறப்பிடமாக உள்ள தமிழ்நாட்டில் இருந்து, தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட அனுப்பி வைக்கப்பட்ட சட்ட மசோதாவைத் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைப்பது ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. 8 கோடி பேரின் பிரதிநிதித்துவம், தமிழக சட்டசபை இயற்றியுள்ள இந்த சட்ட மசோதாவை ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதுதான் அவரது அரசியல் கடமை.

 அரசியல் அமைப்பு சாசனத்திற்கு எதிரானது

அரசியல் அமைப்பு சாசனத்திற்கு எதிரானது

மாநில அரசு அனுப்பும் சட்ட மசோதாக்கள் மாநிலப் பட்டியலில் இருந்தால், அதனை ஆளுநர் மறு ஆய்வுக்கு அரசுக்குத் திருப்பி அனுப்ப ஆளுநருக்கு உரிமை உள்ளது. ஆனால் மத்திய அரசு பட்டியலில் இருப்பதையும் பொதுப் பட்டியலில் இருப்பதையும் ஆளுநர் திருப்பி அனுப்புவது என்பது இந்திய அரசியல் அமைப்பு சாசனத்திற்கு எதிரான செயல். சமூகநீதி கோட்பாட்டைக் காக்க ஒரு மாநிலம் எடுக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பது சரி அல்ல.

 அதிமுக அரசு

அதிமுக அரசு

நீட் தேர்வு காரணமாகப் பல ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் படிக்க இடம் கிடைத்துள்ளதாகக் கூறுவது முற்றிலும் தவறு. கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 7.5 இட ஒதுக்கீடு காரணமாகவே ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி, நீட் தேர்வுக்குப் பதிவு செய்த லட்சக் கணக்கான மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. நீட் தேர்வைக் கண்டு மாணவர்கள் அஞ்சும் நிலையே உள்ளது.

 சமூக அநீதியான ஒரு தேர்வு

சமூக அநீதியான ஒரு தேர்வு

நீட் தேர்வு மருத்துவ படிப்புகளுக்கான கொள்ளைகளை நிறுத்தவில்லை. நீட் கோச்சிங் செனடர்களில் 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. அதேபோல பிஜி மருத்துவ படிப்புகளுக்கும் 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை செலவு செய்ய வேண்டி உள்ளது. இப்படி லட்சக் கணக்கில் செலவு செய்தால் தான் மாணவர்கள் மருத்துவர் ஆக முடியும் என்ற சூழலை நீட் ஏற்படுத்தி உள்ளது. நீட் என்பது சமூக அநீதியான ஒரு தேர்வு.. ஏழை மாணவர்களை நுழைய விடாத தேர்வு. எனவே இதை நாம் ஒழிக்க வேண்டும்.

Recommended Video

    TN Assembly | தமிழக சட்டப்பேரவை - சிறப்புக்கூட்டம் | NEET | 08-02-2022
     மீண்டும் மாநில பட்டியல்

    மீண்டும் மாநில பட்டியல்

    அனிதா தொடங்கி 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு காரணமாக தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். நீட் தேர்வு என்பது ஏழை கிராமப்புற ஒடுக்கப்பட்ட மக்களை மருத்துவக் கல்விக்குச் செல்வதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது தான். எனவே, நீட் தேர்வு முறையைத் தகர்த்து எறிய வேண்டும். இந்த நீட் விலக்கு மசோதாவுக்குத் தமிழக வாழ்வுரிமை கட்சி முழு ஆதரவைத் தரும். இத்துடன் நில்லாமல், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டுவரவும் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+