வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்!
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து தவாக வெளியேறுவதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளது தொடர்பாக பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கருத்து தெரிவித்துள்ளார். வேல்முருகன் வெளியேறி இருப்பது குறிப்பிட்ட பகுதிகளில் திமுகவுக்கு இழப்பு என்று கூறிய தராசு ஷ்யாம், முதல்வர் ஸ்டாலின் சமாதானம் செய்வாரா என்ற எதிர்பார்ப்பும் இருப்பதாக கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 32 நாட்களே இருக்கும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து தவாக விலகி இருக்கிறது. திமுகவிடம் வைத்த கோரிக்கைகள் ஏற்கப்படாததால், கூட்டணியில் இருந்து விலகுவதாக வேல்முருகன் தெரிவித்துள்ளார். வட மாவட்டங்களில் கணிசமான வன்னியர் வாக்கு வங்கியை வைத்துள்ள வேல்முருகன் வெளியேறி இருப்பது திமுகவை பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், வேல்முருகன் விலகியது அந்தப் பகுதியில் இருக்கும் திமுகவினருக்கு கவலையை கொடுத்திருக்கும். ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு முழுவதும் பார்த்தால் பெரிய இழப்பு இல்லை. அதேபோல் வேல்முருகன் பாஜக கூட்டணிக்கு செல்ல மாட்டேன் என்றும் கூறிவிட்டார். அதனால் தனியாக போட்டியிட வேண்டிய சூழல் வரும்.
இதற்கு முன் தனியாக வேல்முருகன் போட்டியிட்ட போது பெரிய வெற்றியை பெற முடியவில்லை. திமுகவிடம் வேல்முருகன் கோரிய தொகுதிகள் அவர்களுக்கு எடுபடவில்லை. வன்னியர்களின் முகமாக இருப்பதால், அந்த வாக்கு வங்கியை பாதிக்கும். வேல்முருகன் எப்படி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் வாக்காளர்கள் சீட் கிடைக்காததால் இப்படி பேசுகிறார் என்றே நினைப்பார்கள்.
முதல்வர் ஸ்டாலின் ஆர்எஸ்எஸ் அதிகாரிகளின் பேச்சை கேட்கிறார் என்று எந்த அதிகாரியை மனதில் வைத்து சொல்கிறார் என்று எனக்கு புரியவில்லை. தமிழ்நாட்டின் அதிகார வர்க்கத்தில் ஆர்எஸ்எஸ்-ல் இருந்து வந்த மூத்த அதிகாரிகள் யாரும் இல்லை. என்ன ஐடியாவில் சொல்கிறார் என்று தெரியவில்லை. நெய்வேலி தொகுதி பற்றி பேசுவது புரிகிறது.
வேல்முருகனுக்கு 55, 56 வயது தான் இருக்கும்.. ராமதாஸ் தரப்பு சசிகலா கூட்டணியுடன் சென்றுவிட்டது.. அன்புமணி தரப்பு அதிமுக பக்கம் சென்றுவிட்டது.. இதனால் வேல்முருகன் திமுக பக்கம் இருந்திருந்தால் பலன் இருந்திருக்கும். அவர்கள் வாக்கு வங்கி எண்ணிக்கை அடிப்படையில், தொகுதி பங்கீட்டில் பிரச்சனை இருக்கலாம். திமுகவில் தொகுதி பங்கீட்டில் பிரச்சனை அதிகமாக உள்ளது.
இனியும் வேல்முருகன் மீண்டும் திமுகவுக்கு செல்வாரா? முதல்வர் ஸ்டாலின் அழைத்து சமாதானம் செய்வாரா என்று தெரியவில்லை. இருந்தாலும் வேல்முருகன் செல்வது வட மாவட்டங்களில் திமுகவுக்கு இழப்பு தான் என்று தெரிவித்துள்ளார். தராசு ஷ்யாமின் கருத்தை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வேல்முருகனை அழைத்து சமாதானம் செய்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
-
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்!












Click it and Unblock the Notifications