தள்ளுவண்டி கடையில் யானைக்கு இட்லி ஊட்டும் வியாபாரி.. பிரம்மாண்ட ஜீவன் பொழியும் பாசம்.. நெகிழ்ச்சி
சென்னை: உயிரினங்களுக்கு இடையிலான அன்பிற்கு மொழிகள் தேவையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், ஒரு வியக்கத்தக்க சம்பவம் தற்போது அரங்கேறியுள்ளது.. பிரம்மாண்டமான உருவம் கொண்ட ஜீவன் ஒன்று, மனிதநேயத்தின் முன் பணிந்து நிற்கும் அந்த நெகிழ்ச்சியான காட்சி தூத்துக்குடியில் நடந்திருக்கிறது.. என்னாச்சு தெரியுமா?
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலின் யானை ஆதிநாயகி, அந்த ஊர் மக்களின் பாசத்திற்குரிய ஒரு அங்கமாகத் திகழ்கிறது..

தூத்துக்குடி கோவில் யானை
கோவில் யானை என்றாலே வழக்கமாக கோவிலுக்குள் இருப்பதைப் பார்த்துப் பழகிய நமக்கு, ஆதிநாயகியின் தினசரி காலை உணவுப் பயணம் மிகவும் ஆச்சரியமாகவும் உருக்கமாகவும் இருக்கிறது.. தினமும் காலை நேரத்தில் தனது பாகனுடன் நடைப்பயிற்சிக்குச் செல்லும் ஆதிநாயகி, வழியில் உள்ள ஒரு சிறிய தள்ளுவண்டிக் கடையில் நின்று தன் காலை உணவை முடிப்பதைத் வழக்கமாகக் கொண்டுள்ளது..
இந்த சம்பவம் வெறும் விலங்கின் பசி போக்கும் நிகழ்வாக இல்லாமல், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள ஆழமான அன்புப் பிணைப்பை வெளிப்படுத்துகிறது..
தள்ளுவண்டியில் டிபன் கடை
ஆழ்வார்திருநகரி கோவில் அருகே தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வரும் மாணிக்கம் என்பவர், கடந்த 8 ஆண்டுகளாக யானைக்கு உணவளித்து வருகிறார்.. யானை கடைக்கு வந்ததும், மாணிக்கம் மிகுந்த மகிழ்ச்சியுடன் அதற்கென தயாராக வைத்திருக்கும் இட்லி மற்றும் பிற உணவுகளை வாழை இலையில் வைத்துப் பரிமாறுகிறார்..
யானையும் மிகுந்த சாதுர்யமாக தன்னுடைய தும்பிக்கையை நீட்டி, உணவை வாங்கி மிகவும் ரசித்து உண்ணும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்துகிறது..
மாணிக்கம் யானை பாகன்
யானை ஆதிநாயகி மிகவும் சுவை அறிந்த விலங்காக, அந்த உணவகத்தின் சுவைக்கு அடிமையாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.. சில நாட்கள் மாணிக்கம் கடையை விடுமுறை அளித்தால், பாகன் யானையை அந்த வழியாக அழைத்துச் செல்லும்போது, யானை அந்த கடை இருந்த இடத்திலேயே நின்று கொண்டு அசைய மறுத்து விடுகிறதாம்..
தள்ளுவண்டியை உற்று நோக்கும் அந்தப் பார்வை, தனக்கு உணவு கிடைக்காத ஏமாற்றத்தை வெளிப்படுத்துவதாகவும், பிறகு சில நிமிடங்கள் கழித்து சோகத்துடன் கடந்து செல்வதாகவும் அப்பகுதி மக்கள் உணர்வுபூர்வமாக கூறுகிறார்கள்.. இந்த பாசப் பயணம் விலங்குகளுக்கும் உணர்வுகள் உள்ளன என்பதையும், அன்பு காட்டினால் அவை திருப்பித் தரும் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது..
வியாபாரியின் அன்பு
பகல் முழுவதும் கோவில் பணியில் இருக்கும் யானைக்கு, காலை நேரத்தின் இந்த குட்டி பிரேக் ஒரு புத்துணர்ச்சியாக, மகிழ்ச்சியாகவும் இருக்கிறது..
அந்த வியாபாரியின் அன்புக்கு கட்டுப்பட்டு, யானை ஆதிநாயகி அந்த தள்ளுவண்டியை தன் வாழ்வின் ஒரு பகுதியாகவே கருதுகிறது.. இந்த நிகழ்வு, சமூகத்தில் உள்ள சக உயிர்களிடம் நாம் காட்ட வேண்டிய கருணையையும், நம்பிக்கையையும் எடுத்துக்காட்டும் ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறது.. மனிதர்களும் விலங்குகளும் அன்பால் மட்டுமே பிணைக்கப்பட முடியும் என்பதை இந்தச் செய்தி மிக அழகாகப் பறைசாற்றுகிறது..
அன்பின் தூய்மை
ஆழ்வார்திருநகரி மக்களின் அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட இந்த உருக்கமான பாசப் பயணம், விலங்கு நேயத்தை அனைவருக்கும் போதிக்கிறது.. இவ்வளவு பெரிய யானை, ஒரு சாதாரண மனிதரை நம்பி தன் காலை உணவிற்காகக் காத்திருப்பது, அந்த மனிதரின் அன்பின் தூய்மையைக் காட்டுகிறது.. பசி போக்கும் இந்த நட்பு, மனிதநேயத்தின் மிக உயர்ந்த வடிவம் என்பதை சந்தேகமின்றி சொல்லலாம்..
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications