இந்தி திணிப்பு.. பொது மேடையில் அறிவுரை கூறிய வெங்கையா.. நெளிந்தபடியே சிரித்த ஈபிஎஸ்- ஓபிஎஸ்
சென்னை: எந்த மொழியையும் திணிக்கவே கூடாது என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அறிவுரை வழங்கினார்.
கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரையின் படி மும்மொழிக் கொள்கையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது இந்தியை திணிக்கும் ஒரு முயற்சி என தமிழக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து தமிழகத்தில் இரு மொழி கொள்கைதான் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. ஆனால் விரைவில் புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது.

புத்தகம்
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய "கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்" என்ற புத்தகம் இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த இரண்டு வருடங்களாக செய்த பணிகள் குறித்த ஆவண புத்தகமாக இது வெளியாக இருக்கிறது.

எதிர்க்கவும்
சென்னையில் கலைவாணர் அரங்கத்தில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் வெங்கையா நாயுடு பேசினார். அவர் கூறுகையில் எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது. எந்த மொழியையும் எதிர்க்கவும் கூடாது.

கற்க வேண்டும்
தாய் மொழி மட்டுமின்றி மற்ற மொழிகளையும் கற்றதால் இந்த உயர்வை பெற முடிந்தது. குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தாய்மொழியில் பேச கற்றுக் கொடுங்கள். அதே நேரம் மற்ற மொழிகளை கற்க செய்யுங்கள். மற்ற மொழிகளையும் ஆழமாக கற்க வேண்டும் என்றார் வெங்கையா.

நெளிந்த படி சிரித்த ஈபிஎஸ்- ஓபிஎஸ்
வெங்கையா நாயுடு மும்மொழி கொள்கை குறித்து பேசுகையில் எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது, எதிர்க்கவும் கூடாது என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியபோது அங்கிருந்த முதல்வர் எடப்பாடியும் ,துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் நெளிந்தபடியே சிரித்தனர்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications