Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் நடந்த விழா.. தமிழ்நாடு காவல்துறையிடம் வழங்கப்பட்ட ஜனாதிபதி கொடி! ஏன்? - பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு காவல்துறைக்கு சிறப்பு மிகு ஜனாதிபதி கொடியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தமிழக காவல்துறைக்கு ஜனாதிபதி கொடி வழங்கும் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று காலை 10 மணிக்கு விழா தொடங்கியது. முன்னதாக சென்னை எழும்பூரின் ராஜரத்தின மைதானம் அமைந்துள்ள பகுதிகளில் வாகன போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.

 துணை ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதை

துணை ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதை

தொடந்து விழா தொடங்கியதும், இந்திய துணை ஜனாபதி வெங்கையா நாயுடுக்கு தமிழக போலீசாரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் தமிழக காவல்துறையின் அணிவகுப்பை ஏற்றார். தொடர்ந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஜனாதிபதி கொடியை வழங்கினார். ஜனாதிபதி கொடியை பெற்றுக்கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் அதனை, டிஜிபி சைலேந்திரபாபுவிடம் வழங்கினார். டிஜிபி சைலேந்திர பாபு துணை ஜனாதிபதி கொடியை பெற்றுக்கொண்டு அதை தமிழக போலீசாருக்கு காண்பித்தார்.

 ஒரெ அடையாளம்

ஒரெ அடையாளம்

இந்நிகழ்ச்சியில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், உள்துறை செயலாளர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், டிஜிபிக்கள், கூடுதல் டிஜிபிக்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள் மற்றும் எஸ்பிக்கள் என காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல் இனி டிஜிபி முதல் கடை நிலை போலீசார் வரை அனைத்து போலீசாருக்கும் ஒரே மாதிரியான அடையாளமாக ஒரு லோகா வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் இனிமேல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் ஒரே மாதிரியான லோகோ வழங்கப்படுகிறது. இதனை போலீசார் தங்களது சீருடையின் இடது தோள்பட்டை பகுதியில் ஒட்டிக்கொள்ளலாம்.

 புதிய லோகோ

புதிய லோகோ

தமிழ்நாட்டில் காவலர் முதல் டிஜிபி வரை அனைவருக்கும் காக்கி நிறச் சீருடை இருந்தாலும், அவரவர் பதவியின் அடிப்படையில் சீருடை மாறுபட்டு இருக்கும். ஆனால் பொதுவாக தமிழ்நாட்டு போலீசாருக்கு என ஒரு அடையாளமாக இந்த லோகோ இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய லோகோவில், தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் மற்றும் அசோக சின்னத்துடன் இந்திய தேசியக் கொடி ஆகியவற்றுடன் தமிழ்நாடு காவல் என்ற வார்த்தையும் உள்ளது.

 தென்னிந்தியாவில் முதல் மாநிலம்

தென்னிந்தியாவில் முதல் மாநிலம்

தமிழக போலீசாருக்கு மிக உயரிய ஜனாதிபதியின் சிறப்பு கொடி வழங்கப்பட்டுள்ளது மிகப்பெரிய கவுரவமாகும். இந்தியாவில் இதுபோன்ற சிறப்பு கொடியினை இதுவரை 10 மாநில போலீசாருக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. தென்மாநிலங்களில் இந்த சிறப்பை பெறும் முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+