மாநாடு நாளை திட்டமிட்டபடி ரிலீஸ்.. இயக்குநர் வெங்கட் பிரபு ட்வீட்! குஷியில் சிம்பு ஃபேன்ஸ்!
சென்னை: சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு ட்வீட் செய்துள்ளார்,
வெங்கட் பிரபு எழுதி இயக்கி, சுரேஷ் காமாட்சி தயாரித்த சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் மாநாடு.
சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. விவசாயிகள் ஹேப்பி
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் எஸ். ஜே. சூர்யா, பாரதிராஜா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
மாநாடு
முதலில் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்தத் திரைப்படம், பின்னர் நாளை (நவ. 25) வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்தச் சூழலில் சில தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு திரைப்பட ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாகப் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடந்த சில மணி நேரத்திற்கு முன் ட்வீட் செய்திருந்தார்.
சுரேஷ் காமாட்சி ட்வீட்
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதில் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக் கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்
நாளை ரிலீஸ் கன்பார்ம்
இதனால் சிம்பு ரசிகர்கள் பெரும் சோகமடைந்தனர். இந்தச் சூழலில் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றைத் தனது ட்விட்டரில் பகிர்ந்ததுள்ளார். மாநாடு திரைப்படத்திற்கு அன்பும் ஆதரவும் கொடுத்த அனைவருக்கும் நன்றி எனப் பதிவிட்டுள்ள வெங்கட் பிரபு, #MaanaaduFrom25thNovember #maanaadu ஆகிய ஷேஷ்டேக்குகளை பயன்படுத்தியுள்ளார்,
உற்சாகம்
மேலும், வெங்கட் பிரபு பகிர்ந்துள்ள மாநாடு போஸ்டரிலும் படம் நாளை வெளியாகும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநாடு திரைப்படம் திட்டமிட்டபடி நாளை வெளியாவது உறுதியாகியுள்ளது. இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
|
தயாரிப்பு நிறுவனம்
அதேபோல மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான JSK Film corporationஇன் சதீஷ்குமாரும் தனது ட்விட்டரில் மாநாடு திரைப்படம் நாளை திட்டமிட்டபடி வெளியாகும் என பதிவிட்டுள்ளார். டைம் டிராவல் கான்சேப்டை வைத்து உருவாக்கப்பட்டுள்ள மாநாடு திரைப்படத்தின் மீது மிகப் பெரியளவில் எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.