கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் தமிழாற்றுப்படையில் கண்ணதாசனை போற்றி சிலிர்த்து சிலாகித்த வைரமுத்து
சென்னை: கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் கவிப் பேரரசு வைரமுத்து தமது தமிழாற்றுப் படையில் கவியரசு கண்ணதாசன் பிறந்த நாளை முன்னிட்டு சிலிர்க்க வைக்கும் கவிதையை வாசித்து சிறப்பு செய்தார் கவிப்பேரரசு வைரத்து.
காலத்தால் அழியாக காவியங்களைப் படைத்த கவியரசர் கண்ணதாசனுக்கு இன்று 94-வது பிறந்த நாள். ஆத்திகம், நாத்திகம், அரசியல், காதல், காதல், ஆன்மீகம் என அத்தனையிலும் தடம் பதித்தவர் கவியரசர் கண்ணதாசன்.

காலம் கவியரசர் கண்ணதாசனை இந்த தமிழர் உலகத்திடம் இருந்து உயிரால் பிரித்திருக்கலாம். ஆனால் எட்டுக்கும் எழவுக்குமாக நல்லதுக்கும் கெட்டதுக்குமா நம் கவியரசர்தான் தமிழர் இல்லங்களில் வாராய் என் தோழி வாரோயோ எனவும் எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் கணவா எனவும் பாடிக் கொண்டே நம்முள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அத்தகைய மகத்தான கவியரசர் கண்ணதானின் 94-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் கவிப்பேரரசு வைரமுத்து சிறப்புரையாற்றினார். கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படையில் கவியரசர் கண்ணதாசன் என்ற தலைப்பில் சிலிர்க்க வைக்கிற சிறப்புமிக்க கவிதையை வாசித்தார் கவிப்பேரரசு கண்ணதாசன்.
கவியரசர் கண்ணதாசனின் சினிமா பாடல்களை மேற்கோள்காட்டி வியத்ததகு கவிதை மழையை பொழிந்தார் கவிப்பேரரசு கண்ணதாசன்.












Click it and Unblock the Notifications