வேளச்சேரி ரயில் நிலையம் முதல் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை வரை பல வருடங்களாக மாறாத காட்சிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேளச்சேரி ரயில் நிலையம் கடந்து மேம்பாலம் இறங்கினால் பள்ளிக்கரணையில் கைவேலி சந்திப்பு வரும். அந்த இடம் முதல் மேடவாக்கம் கூட்ரோடு வரை ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளதாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் குற்றம்சாட்டுகிறார்கள். கைவேலி சந்திப்பு முதல் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு அங்கு, நடைபாதைகளில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள கடைகள் காரணம் என்றும், அந்த ஆக்கிரமிப்பை நிரந்தரமாக அகற்ற பள்ளிக்கரணை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையில் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி என்றால் அது வேளச்சேரியை சுற்றியுள்ள பகுதிகள் தான் தரமணி தொடங்கி சோழிங்கநல்லூர் தாண்டி நாவலூர் வரை ஏராளமான ஐடி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைந்துள்ளன. அந்த பகுதிக்கு கிண்டி வழியாக செல்ல வேண்டும் என்றால், வேளச்சேரி, மேடவாக்கம் சாலையில் செல்ல வேண்டும்.

Views that have not changed over the years from Velachery Railway Station to Pallikaranai Kamatchi

வேளச்சேரி ரயில் நிலையத்தைதாண்டி, மேம்பாலம் கடந்து பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையை நோக்கி சென்றால், கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்திப்பீர்கள்.. காரணம் அங்கு நடைபாதைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள் முக்கிய காரணம் ஆகும். இந்த கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், இதனை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் பெயருக்கு அகற்றாமல் நிரந்தரமாக அங்கு ஆக்கிரமிப்புகள் ஏற்படாத அளவிற்கு அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஏனெனில் இந்த சாலை தான் வேளச்சேரி, சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், துரைப்பாக்கத்தை இணைக்கும் முக்கியமான இடம் ஆகும். இங்கு கடைகளுக்கு செல்வோர், வாகனங்களை நடுரோட்டில் நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இதனால் பீக் அவர்ஸ் என்று அழைக்கப்படும் 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.

எனவே கைவேலி முதல் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோல் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை தாண்டி, மேடவாக்கம் கூட்ரோடு சந்திப்பு வரை சாலை மிகவும் குறுகியதாக உள்ளதால் வாகனங்கள் காலையிலும், மாலையிலும் செல்ல முடியாமல் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது.

இருசக்கர வாகன ஓட்டிகள், காரில் செல்வோர் இந்த சாலையை கடக்க நீண்ட நேரம் ஆகிறது. இந்த சாலையில் உள்ள ஆக்கிரிமிப்புகளை போர்க்கால அடிப்படையில் அகற்றி, சாலையை அகலப்படுத்த வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் மிக முக்கியமான ஐடி சாலையான இந்த பகுதியில் உள்ள பிரச்சனைகளில் அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+