அசெம்பிளியில் அனல் பறந்த சினிமா டயலாக்! விஜய் செய்த தவறு! இதுக்கா ஓட்டு போட்டோம்? புலம்பும் மக்கள்
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, அமோனியா வாயு கசிவு விவகாரம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த பிரச்சனைகள் குறித்து பேசாமல், சட்டமன்றத்தில் சினிமா டயலாக் மாதிரி முதலமைச்சர் விஜய் பேசியிருந்தது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திருக்கிறது.
குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை பிரச்சனைகள், சீரியஸானதாக மாறியிருக்கின்றன. மறுபுறம் கடந்த ஆட்சியில் இருந்த அதே, சாதிய மோதல் பிரச்சனைகள் இந்த ஆட்சியிலும் நீடித்து வருகின்றன.

புதுக்கோட்டையில் சாதிய மோதல் சூழல்
நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாங்குடி கிராமத்தில் நடந்த கோயில் திருவிழாவில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் சாமி தரிசனம் செய்ய ஆதிக்க சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இது எல்லாம் காலங்காலமாக நடக்குற விஷயமாக இருந்தாலும்.. நேற்றைய தினம் அரசு அதிகாரிகள் முன்னிலையில் இது நடந்திருக்கிறது என்பதுதான் மக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
அதாவது, இந்த கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை டேக் ஓவர் செய்தது. எனவே சாமி தரிசனத்திற்கான ஏற்பாடுகள், அறநிலையத்துறை செயல் அலுவலர் சுதா தலைமையில் மாவட்ட உதவி ஆணையர் ரஞ்சிதா முன்னிலையில் நடந்தன.
வழிபாட்டு உரிமை மறுப்பு
ஜூன் 22ம் தேதி மாலை அலங்கரிக்கப்பட்ட சுவாமி, தரிசனத்திற்காக தேரில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது, அறந்தாங்கி டிஎஸ்பி சார்லஸ், பட்டியலின மக்கள் 20 பேரை தரிசனத்திற்காக தேரை நோக்கி அழைத்து வந்திருக்கிறார். ஆனால், இதை பார்த்த ஊர் மக்கள் உடனே சுவாமியை தேரிலிருந்து கீழே இறக்கி கோயிலுக்குள் கொண்டு வைத்துவிட்டனர். இதனால் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த சம்பவம் புதுக்கோட்டை முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
விஜய் கவனத்தில் கொள்வாரா?
நாடு சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இன்னும் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை முழுமையாக கிடைக்கவில்லை. இது குறித்த சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் இதைப்பற்றி பேசவில்லை.
பச்சிளம் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் கொடூரம் இன்னும் குறையவில்லை. செயின் பறிப்பு, கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டேதான் இருக்கின்றன. இதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். ஆனால், இதற்கு பதிலளிக்காமல் எதிர்க்கட்சியை விமர்சித்து சினிமா பாணியில் சட்டமன்றத்தில் விஜய்யின் பேச்சு இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
கடந்த ஆட்சியில் தோல்வி
கடந்த ஆட்சியில் ஏற்பட்ட தோல்விதான் தற்போதைய ஆட்சி மாற்றத்திற்கான காரணங்களாகும். குறிப்பாக வேங்கைவயல் பிரச்சனை, தூய்மை பணியாளர்களின் போராட்டம்.. இதெல்லாம் ஆட்சி மாற்றத்திற்கான காரணமாகும். அப்படி இருக்கையில், விஜய் இந்த பிரச்சனைகளில் கவனம் செலுத்தாமல், எதிர்க்கட்சி vs ஆளும்கட்சி என சட்டமன்றத்தில் சண்டை போட்டுக்கொண்டிருந்தால், விஜய் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வேகமாக குறைந்துவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications