Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடலூரில் நாளை தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் கடலூரில் விஜய்க்கு நாளை பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே இருக்கிறது. திமுக தரப்பில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, ஆ.ராசா, கே.என்.நேரு உள்ளிட்டோர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் பொதுக் கூட்டம் நடத்தி ஒரு மாவட்டத்தின் அத்தனை வேட்பாளர்களையும் மேடையேற்றி வாக்கு சேகரித்து வருகிறார்.

Vijay

உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று அந்த வேட்பாளரை தனது பிரச்சார வாகனத்தில் ஏற்றி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரம் மக்களிடையே நன்றாக எடுபடுகிறது. பிரச்சாரத்தின் போது மக்களுடன் பேசி ஜாலியாக பிரச்சாரத்தை செய்து வருகிறார். அதேபோல் தவெக தலைவர் விஜய்யும் நேற்று முன் தினம் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இன்று காரைக்குடியில் விஜய் பிரச்சாரம் செய்யும் சூழலில், நாளை கடலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. கடலூரில் நாளை தவெக தலைவர் விஜய் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெகவினர் பிரம்மாண்டமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை கடலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். அதற்கான அனுமதியை பெற தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. அதற்கு தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரமே காரணமாக அமைந்துள்ளது.

ஏனென்றால் தேர்தல் ஆணைய விதிகளின்படி முதலில் விண்ணப்பம் செய்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். அதன்படி விஜய் தரப்பு முன்கூட்டியே கடலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் திட்டக்குடி, நெய்வேலி, வடலூரில் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி இருந்தார். தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், உதயநிதி ஸ்டாலின் மாற்று திட்டத்தை செயல்படுத்துவார் என்று பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+