நான் சத்தமில்லாமல் விவாகரத்து பெற முயன்றும்! விஜய் பிரிந்து செல்ல மறுக்கிறார்! சங்கீதா குற்றச்சாட்டு
சென்னை: விஜய்யின் அரசியல் சூழல் கருதி பலமுறை சுமூகமாக விவாகரத்து பெற முயற்சித்தும் விஜய் அதற்கு ஒப்புக் கொள்ள மறுக்கிறார் என சங்கீதா அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் அவர் கூறியிருப்பதாவது: விவாகரத்து முடியும் வரை என்னை நீலாங்கரை வீட்டில் தங்கியிருக்க விஜய் அனுமதிக்க வேண்டும். அவர் தங்கியிருக்கும் வீட்டில் எனக்கும் சரிபாதி பங்கு இருக்கிறது.

விவாகரத்து முடிந்து வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்க வேண்டும். வழக்கறிஞர் மூலம் விஜய் தரப்பினர் மிரட்டுகின்றனர். அந்த வீடுதான் எங்கள் மணவாழ்க்கையின் முக்கிய இல்லமாக இருக்கிறது.
வழக்கு முடிவடையும் வரை அங்கு தங்க அனுமதி அளிக்க வேண்டும். அதற்கு மாற்றாக சமமான வசதி கொண்ட மற்றொரு வீடு வழங்கப்பட வேண்டும். விஜய்யின் அரசியல் சூழலை கருதி பலமுறை சுமூகமாக விவாகரத்து பெற முயற்சித்தேன். ஆனால் விஜய் பிரிந்து செல்ல மறுக்கிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: பிரிட்டன் குடியுரிமையுடன் லண்டனில் வசித்து வருவதால் சென்னையில் எனக்கு தனியாக வீடு இல்லை. விவாகரத்து கோரியுள்ளதால் தற்போது சென்னையில் வீடின்றி தவிக்கிறேன். என்னை வீட்டிற்குள் அனுமதிக்க விஜய் மறுக்கிறார். அந்த வீட்டில் எனக்கும் சரி பங்கு இருக்கிறது என சங்கீதா தெரிவித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: நீலாங்கரை வீட்டில் நான் வசிக்க விஜய் அனுமதிக்க மறுக்கிறார். பிரிட்டன் குடியுரிமை கொண்ட எனக்கு சென்னையில் எங்கள் குடும்ப அந்தஸ்துக்கு ஏற்ப வீடு இல்லை. எனவே விவாகரத்து முடியும் வரை நீலாங்கரை வீட்டிலேயே நான் தங்க அனுமதிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் அவர் அந்தஸ்துக்கு ஏற்ப ஒரு வீட்டில் என்னை தங்க வைக்க வேண்டும். விவாகரத்து முடியும் வரை எனக்கு விவாகரத்துக்கு பிறகு நான் வேறு ஒரு வீட்டிற்கு சென்றுவிடுகிறேன். கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் எனக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் இந்த செயலுக்கு ரசிகர்கள், தொண்டர்கள், சக நடிகர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இயக்குநர் அமீர் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் ஒரு ஹிட்லர் உருவாகிக்கொண்டு இருக்கிறார். மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு மகளிர் தின விழா எனும் கேவலமான அரசியல் நிகழ்ச்சி என தெரிவித்துள்ளார்.
அது போல் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியிருப்பதாவது: இந்த விவகாரம் தனிப்பட்ட விவகாரம் என்றாலும் நாளை மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில் சங்கீதா போன்றோருக்கு கூட நியாயம் கிடைக்க வேண்டும். அவர் சிரமத்தில் இருப்பதாகவும் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் சங்கீதா தனது மனுவில் தெரிவித்திருந்தார் என தமிழிசை கருத்து கூறியுள்ளார்.
-
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
Velmurugan: விஜய் உடன் கூட்டணி அமைக்கிறதா தவாக? வேல்முருகன் முன் இருக்கும் கூட்டணி வாய்ப்புகள் என்ன? -
சினிமாவை விடுங்க.. அரசியலிலும் ரஜினியை காப்பி அடிக்கும் விஜய்? கட்சி நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங் -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
25 டூ 15.. சர்ரென சரிந்த சப்போர்ட்.. விஜய் கோட்டையில் விரிசல்? தவெக சர்வே சொல்லும் ‘ஷாக்’ ரிப்போர்ட் -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
கருப்பு ஆடு யார்? விஜய் - சங்கீதா விவாகரத்து மனு கசிந்தது எப்படி? உண்மையை உடைத்த செங்கல்பட்டு ஆர்டிஐ -
மும்பை பயணம் முடிந்த கையோடு விஜய் எடுத்த முடிவு! புதுவை தவெக வேட்பாளர்கள் பட்டியல் நாளை ரிலீஸ் -
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ












Click it and Unblock the Notifications