"விஜய் ஆச்சரியக்குறியோ தற்குறியோ எப்படி இருந்தாலும் கவலை இல்லை.. எங்க குறியே வேற” - அமைச்சர் ரகுபதி
சென்னை: "விஜய் ஆச்சரியக் குறியோ தற்குறியோ எப்படி இருந்தாலும் கவலை இல்லை. எங்கள் குறி தேர்தல் குறிதான். யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை; யாரோடும் எங்களுக்கு பகை இல்லை" என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நேற்று நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய தவெக தலைவர் விஜய், தவெகவினர் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் அளித்துப் பேசினார். விஜய் பேசுகையில், "யாரைப் பார்த்து தற்குறி என்கிறீர்கள்? இந்த தற்குறிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து தான் உங்கள் அரசியலை கேள்விக்குறி ஆக்கப்போகின்றனர். அவர்கள் தற்குறி அல்ல, ஆச்சர்யக்குறிகள்.

மாற்றத்துக்கான அறிகுறி. தற்குறிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, வாழ்நாள் முழுவதும் விடையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உங்கள் அரசியலேயே கேள்விக்குறியாக்க போகிறார்கள், இந்த போட்டி எப்படி இருக்க போகுது என்றால், மக்களுக்காக மக்களோடு மக்களாக இருக்கும் நம்மளை மக்களே தேர்வு செய்ய போகிறார்கள். ஆல்ரெடி தேர்வு செய்தாச்சு." எனப் பேசினார் விஜய்.
இந்நிலையில், புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் ரகுபதியிடம், செய்தியாளர்கள் தவெக தலைவர் விஜய் நேற்று காஞ்சிபுரத்தில் பேசியது பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரகுபதி, "விஜய் ஆச்சரியக் குறியோ தற்குறியோ எப்படி இருந்தாலும் கவலை இல்லை. எங்கள் குறி தேர்தல் குறிதான். யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை.
எங்களுக்கு யாரோடும் போட்டி இல்லை. களத்தில் இருக்கும் அனைவரையும் சமமாகவே பார்க்கிறோம். அவர்கள் உங்களுக்கு அரசியல் எதிரிகள் தானே தவிர தனிப்பட்ட எதிரிகள் இல்லை. யாரோடும் எங்களுக்கு பகை இல்லை. ஆனால், தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பான ஆட்சியைத் தருவது திராவிட மாடல் அரசு தான். எந்த ஏமாற்று வேலையும் தமிழ்நாட்டில் பலிக்காது. தவெக என்பது பாஜகவின் 'சி' டீம்." என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
மேலும், "தமிழ்நாட்டு மக்களை வாழவைக்க வேண்டும் என்று சொன்னால் திராவிட மாடல் ஆட்சி வந்தால் தான் முடியும். என்பதை இந்த நான்கு ஆண்டுகளில் நிரூபித்துள்ளோம். சொன்னதை செய்துள்ளோம், செய்வதை தான் சொல்லியுள்ளோம். நாங்கள் பொய்யான வாக்குறுதிகள் கொடுப்பது கிடையாது.
தமிழர்களின் வரலாற்றையும், திராவிடத்தின் வரலாற்றையும் தற்போதுள்ள இளைய தலைமுறை அறிந்து கொள்வதற்காக நாங்கள் அறிவுத் திருவிழாவை நடத்தினோம். இது பற்றி எல்லாம் சிலருக்கு புரிதல் கிடையாது. அவர்களது ஒரே எண்ணம் ஆட்சியை கைப்பற்றுவது. ஆட்சிக்கு வந்து உட்கார வேண்டும் என்பதுதான்.
அதை தவிர தமிழர்களைப் பற்றியோ தமிழர்களின் கொள்கையை பற்றியோ பண்பாட்டைப் பற்றியோ கலாச்சாரத்தை பற்றியோ அவர்களுக்கு எந்தவிதமான கவலையும் கிடையாது. விஜய் தரக்குறைவாக பேசிக்கொண்டு தன்னைத்தானே மக்களிடத்தில் தரம் தாழ்த்தி வருகிறார். அதற்கு ஏன் நாங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார் ரகுபதி.
-
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்? -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
"எம்ஜிஆர் போல இன்னொருவர் வர வாய்ப்பில்லை.." சிவகுமார் திட்டவட்டம்.. பாய்ந்து வரும் விஜய் ரசிகர்கள் -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
Velmurugan: அதிமுகவில் 3 சீட்? பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன்! தவாக வேல்முருகன் உறுதி! -
சொதப்பும் ஸ்டாலின்.. திமுகவுக்கு எதிராக திரும்பும் வன்னியர் வாக்கு! தலித் வாக்குகளை பிரிக்கும் விஜய் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா?












Click it and Unblock the Notifications