Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓவரா போறாரே.. விஜய்யின் அரசியலுக்கே பிரச்சனை? புஸ்ஸி ஆனந்தின் அத்துமீறல் - ரசிகர்கள் ஆதங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் அறிகுறிகள் தெளிவாக தெரிவதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து இருக்கும் நிலையில், அவரது அரசியல் நடவடிக்கைகளை கவனித்து வரும் புஸ்ஸி ஆனந்த் செயல்பாடுகள் பலரை அதிருப்தியடைய வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சுக்கள் எழுந்த நிலையில், கடந்த ஆண்டு நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் இயக்க நிர்வாகிகளை களமிறக்கினார் விஜய். லியோவை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் 68 ஆவது படத்தில் நடித்து முடித்த பிறகு சினிமாவுக்கு கேப் விட்டு அரசியல் கட்சி தொடங்கி தேர்தல் பணிகளில் விஜய் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

Vijay fans upset with the activities of Makkal iyakka Bussy Anand

அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த ரசிகர்களை விஜய் கேட்டுக்கொண்டபோது அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்ற பேச்சு எழுந்தது. அதன் தொடர்ச்சியாக காயிதே மில்லத், பாவேந்தர் பாரதிதாசன், தீரன் சின்னமலை, சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளன்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.

ரமலான் மாதம் இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் விருந்து வழங்கி நலத்திட்ட உதவி வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர், விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம் திட்டம் மூலம் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் உள்ள ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு விஜய் நேரில் பரிசுகளை வழங்கி கவுரவித்தது அவரது அரசியல் வருகையை உறுதிபடுத்தியது. 12 மணி நேரத்துக்கும் மேலாக மேடையில் நின்ற விஜய் மாணவர்கள், பெற்றோர்களிடம் நடந்துகொண்ட விதம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

அதே சமயம் மாவட்டம், வட்டார அடிப்படையில் பரிசுகளை வழங்காமல் தொகுதி அளவில் மாணவர்களை தேர்ந்தெடுத்து விஜய் பரிசுகளை வழங்குவது அரசியல் நகர்வாகவே பார்க்கப்பட்டது. அந்த நிகழ்வில் அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள் என விஜய் மாணவர்களிடம் அறிவுறுத்தி, ஓட்டுக்கு பணம் வாங்குவது பற்றியும் பேசினார். இந்த நிலையில் விஜய் பிறந்தநாளான இன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த ஜூன் மாதம் சென்னை திருவான்மியூரில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விலையில்லா விருந்தகத்தை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கினார். இதற்காக அவர் காரிலிருந்து இறங்கி வந்தபோது அவரது காலில் விழுந்து விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆசி பெற்றது விமர்சனத்துக்கு உள்ளானது.

அப்போதே அவர் ரசிகர்களிடம் கடுமையாக நடந்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் என்று சொன்ன ரசிகையிடம், பெயரை சொல்லக்கூடாது தளபதி என்றே சொல்ல வேண்டும் என புஸ்ஸி ஆனந்த் பேசியது சர்ச்சைக்குள்ளானது.

அதேபோல் நேற்று விருந்து நிகழ்வில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகியை புஸ்ஸி ஆனந்த் கோபமாக அடித்து விரட்டிய வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்ற அரசியல் கட்சிகளை போலன்றி விஜய் மாற்றத்தை கொண்டு வருவார் என்று மக்களும் ரசிகர்களும் எதிர்பார்க்கும் நிலையில் புஸ்ஸி ஆனந்தின் செயல்பாடுகள் விஜய்யின் அரசியல் நகர்வில் கருப்பு புள்ளியாக மாறும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+