சென்னையில் நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் போது இன்ப அதிர்ச்சி தந்த விஜய்.. நெகிழ்ந்த ரசிகர்கள்
சென்னை: சென்னை திருவான்மியூரில் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வீட திரும்பிய போது நடிகர் விஜய் செய்த சூப்பர் சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. முதற்கட்டமாக கடந்த ஜூன் 28ம் தேதி நடந்தது. இரண்டாம் கட்டமாக சென்னை திருவான்மியூரில் இன்று (ஜூலை 3) விழா நடந்த. இந்த விழாவிலும் நடிகர் விஜய் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

இன்றைய நிகழ்ச்சியில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், புதுச்சேரி, பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர், திருவாரூர், திருப்பத்தூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இருக்கும் தொகுதிகளிலிருந்து முதல் மூன்று இடங்களை பிடித்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 740 க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் பங்கேற்றார்கள்.
சென்னை திருவான்மியூர் தனியார் மண்டபத்தில் நடந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டதை அறிந்த தொண்டர்கள், விஜய்யை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்றார்கள். ஆனால் பள்ளி மாணவ மாணவிகளுக்குகான விருது வழங்கும் விழா என்பதால் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் சில ரசிகர்கள் எப்படியாவது விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், தனியார் மண்டபத்தின் சுவரில் ஏறி குதிக்க முயற்சித்தனர். அவர்களை பவுன்சர்கள் விரட்டிஅடித்தனர்.
இந்நிலையில் இரவு வரை நடந்த நிகழ்ச்சி நடந்த முடிந்த நிலையில், அனைவருக்கும் பரிசுகள் வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய், கடைசியில் வீடு திரும்பினார்.முன்னதாக வீடு திரும்பிய போது, நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். விஜய் தன்னை காண காத்திருந்த ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக வீட்டின் அருகில் வேன் மீது ஏறி நின்றார். அதில் நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து கீழே இறங்கி அங்கிருந்து வீட்டிற்குள் சென்றார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
விஜய் காபி மாதிரி.. பாஜக டீ மாதிரி.. இரண்டையும் ஒன்றாக கலக்க முடியாது.. அண்ணாமலை சொன்ன கருத்து! -
8000 கோடி சொத்து..திரிஷாவின் எக்ஸ் வருண் மணியன்! மல்டி மில்லியனனுடன் நிச்சயதார்த்தம்! பிரிந்தது ஏன்? -
பாஜகவின் வக்கிர அரசியல்.. விஜய் நிகழ்த்த போகும் அதிசயம்.. நாஞ்சில் சம்பத் அப்டேட் -
விஜய்யின் விவாகரத்து பிரச்சனை.. மகன் ஜோசன் ஈரோடு தொழிலாளர்களுடன் செய்த செயல்! குவியும் பாராட்டு -
கரூர் வழக்கில் விஜய்க்கு புதிய சம்மன்.. இறுக்கும் சிபிஐ! 15 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு -
விஜய் பக்கம் வண்டியை திருப்பிய பாஜக.. கிலியில் எடப்பாடி பழனிசாமி.. செம டிவிஸ்ட் -
மூன்றாவது மனுசியோட மூன்றாம் தரமான ட்விட்.. நான் மன்னிப்பு கேட்டிருக்க கூடாது! திரிஷாவுக்கு பார்த்திபன் பதிலடி -
கரூர் கேஸ்! விஜயுடன் சேர்த்து செந்தில் பாலாஜிக்கும் சம்மன்.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை! ஷாக் மேல் ஷாக் -
திரிஷாவுடன் திருமண நிகழ்ச்சிக்கு விஜய் போயிருக்கக் கூடாது! தவெக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் கண்டனம் -
நடிகர் விஜய், த்ரிஷா தனிப்பட்ட வாழ்க்கை.. விமல், பார்த்திபன் கருத்தை கவனித்தீர்களா -
விஜய் என் நண்பர்.. திரிஷாவை பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! மிரட்டல் போன்! உடைத்து பேசிய பார்த்திபன்












Click it and Unblock the Notifications