வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே!
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் உத்தரவின்படி, வரலாற்றில் முதல் முறையாக 300 பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு ஆணைகள் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் வழிகாட்டுதலின்படி வெளிப்படைத்தன்மையுடன் (Transparency) வழங்கப்பட்டதால் மின்வாரிய பொறியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தமிழ்நாடு முதலமைச்சர் C.ஜோசப் விஜய்யின் ஊலழற்ற, நேர்மையான வெளிப்படைத்தன்மையுடன் கூடிய நிர்வாகத்தின் கீழ், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. சி.டி.ஆர். நிர்மல் குமார் அவர்கள் வழிகாட்டுதல்களுடன், 2000 முதல் 2002 ஆம் ஆண்டு உதவி பொறியாளர்கள் (மின்னியல்) ஆக பணியில் சேர்ந்தவர்களுக்கு, தகுதியுடைய 379 பொறியாளர்களில் முதற்கட்டமாக 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (மின்னியல்) செயற்பொறியாளர் பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பலதரப்பட்ட பொறியாளர்களின் கோரிக்கைகள் மற்றும் காலிப்பணிடங்களை நிரப்புவதற்கு ஏதுவாகவும், நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பதவி உயர்வு விவகாரங்களுக்கு தீர்வு காணும் வகையிலும், தகுதியுடைய பொறியாளர்களுக்கு வெளிப்படையான முறையில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, வரலாற்றில் முதன் முறையாக இவ்வளவு பெரிய அளவில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டிருப்பது மின்வாரிய வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த பதவி உயர்வுகள் அனைத்தும் தகுதி மற்றும் வாரிய விதிமுறைகளின் அடிப்படையில் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்பட்டுள்ளன. நீண்டகாலமாக பதவி உயர்வுக்காக காத்திருந்த பொறியாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு, மாண்புமிகு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் அவர்களின் சீரிய நடவடிக்கை மூலம் தீர்வு கிடைத்துள்ளது.
முதலமைச்சர் தலைமையிலான அரசின் பணியாளர் நலன் சார்ந்த அணுகுமுறையின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.
இந்த பதவி உயர்வுகள் ஊழியர்களின் மனஉறுதியை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், மின்வாரியத்தின் செயல்திறன் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தையும் மேலும் மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என கூறப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
காலம் எவ்ளோ வேகமாக சுத்துது! அன்று கடம்பூர் ராஜூவுக்காக விஜய் காத்திருந்தார்! இன்று அப்படியே உல்டா! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
மின்வாரியத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு! format செய்து பெங்களூரில் 2500 ரூபாய்க்கு விற்றது அம்பலம்! -
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
கே.என்.நேரு மீது FIR.. டெல்லிக்கு பந்தை திருப்பிய முதல்வர் விஜய்.. அமலாக்கத்துறை மாஸ்டர் ஆட்டம்? -
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது! -
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன் -
"விஜய், ஆர்.ஜே. பாலாஜிக்காகவே அந்த பதிவு?"... ‘கருப்பு’ சர்ச்சைக்கு நடுவே சூர்யா கொடுத்த சைலண்ட் சிக்னல்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications