தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் பேச்சு
கன்னியாகுமரி: குமரியில் பிரசாரம் மேற்கொண்ட விஜய் தவெக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை கொண்டு வரும் என்பது குறித்து பேசினார். அப்போது, "மாநில வளர்ச்சிக்காக 'மை வெற்றி தமிழ்நாடு' என்ற இணையதளம் உருவாக்கப்படும் என்றும், தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம் கொண்டு வரப்படும். ஆதார் கார்டு போல தமிழ்நாடு சிட்டிசன் பிரிவலன்ஞ் கார்டு வழங்கப்படும்" என்று விஜய் பேசினார்.
மேலும், இடைத்தரகர்கள் இல்லாமல் அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு கொண்டு செல்லப்படும். மாநிலத்தின் வளர்ச்சிக்கான யோசனைகளை நம் ஆட்சி அமைந்தால் பொதுமக்களும் முன் வைக்க முடியும் என்றும், 10 ஆயிரம் அதிகாரப்பூர்வ கையெழுத்துடன் மனு அளிக்கப்பட்டால் அரசு பதில் அளிப்பது கட்டாயம் ஆக்கப்படும் என்றும் விஜய் கூறினார்.

குமரியில் இன்று பரப்புரை செய்த விஜய் சில வாக்குறுதிகளை அளித்தார். விஜய் கூறியதாவது:-
* லஞ்சம் இல்லாமல் அரசின் ஒவ்வொரு நலத்திட்டமும் வீடு தேடி வரும்.
* மாநில வளர்ச்சிக்காக 'மை வெற்றி தமிழ்நாடு' என்ற இணையதளம் உருவாக்கப்படும்
* தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம் கொண்டு வரப்படும்.
* ஆதார் கார்டு போல தமிழ்நாடு சிட்டிசன் பிரிவலன்ஞ் கார்டு வழங்கப்படும்.
* இடைத்தரகர்கள் இல்லாமல் அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு கொண்டு செல்லப்படும்.
* மாநிலத்தின் வளர்ச்சிக்கான யோசனைகளை நம் ஆட்சி அமைந்தால் பொதுமக்களும் முன் வைக்க முடியும்.
*10 ஆயிரம் அதிகாரப்பூர்வ கையெழுத்துடன் மனு அளிக்கப்பட்டால் அரசு பதில் அளிப்பது கட்டாயம் ஆக்கப்படும்.
* 5 லட்சம் பேர் மனு அளித்தால் சட்டசபையில் ஒரு நாள் நேரம் ஒதுக்கி அது குறித்து விவாதிக்கப்படும்.
* ஆண்டு மீன்பிடி தடை காலத்திற்கான மீனவர் பாதுகாப்பு நிதி ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* படகு பாதுகாப்பு நிதி: படகுகளை விடுவிப்பது குறித்து தூதரக வழிகளில் பேச்சுவார்த்தை நடக்கும் வரை வங்கி கடன்களை திருப்பி செலுத்தவும் மீனவர்களின் குழுவுக்கு ஆதரவு அளிக்கவும் படகு உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் உடனடி இடைக்கால நிவாரணம் வழங்கப்படும்.
* கடலோர பகுதிகளில் உள்ள அனைத்து குடிசைகளையும் சிதிலம் அடைந்த குடியிருப்புகளையும் மாற்றி புயல்களை தாங்க கூடிய காலநிலை மாற்றத்தை தாங்குவதற்கான குடியிருப்புகளை கட்ட தனி வீட்டு வசதி திட்டம் உருவாக்கப்படும்.
* இயந்திர படகுகளுக்கான மாதாந்திர டீசல் மானிய ஒதுக்கீட்டை ரூ.1,800-ல் இருந்து ரூ.3,500 லிட்டராக உயர்த்தப்படும். ஒரு லிட்டருக்கு 15 ரூபாய் என்ற நிலையான மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்” என்று கூறினார்.
-
ஆதார் கார்டு போல தமிழ்நாடு சிட்டிசன் பிரிவலன்ஞ் கார்டு வழங்கப்படும்.. குமரியில் விஜய் பேச்சு -
லீக் ஆன ‘ஜனநாயகன்’ பட காட்சியிலும் இஸ்லாமியர்கள் தான் தீவிரவாதிகளா? விஜய்யிடம் அமீர் கேட்ட கேள்வி! -
Jana Nayagan: ஜனநாயகன் படம் செல்போனில் இருந்தா உடனே அழிங்க.. கிரிமினல் நடவடிக்கை பாயும்.. கேவிஎன் நிறுவனம் வார்னிங் -
அன்று சிரஞ்சீவி.. இன்று விஜய்.. இத்தனை ஒற்றுமைகளா? ரிசல்ட் எப்படி இருக்கும்? -
விஜய் அரசியல் என்ட்ரி.. சாதிய கட்சிகளுக்கு வீழ்ச்சியா? -
Vijay: ஒரு நாள் பிரச்சாரம்! அடுத்த நாள் ரெஸ்ட்! தவெகவுக்கே ஓட்டு கேட்காத விஜய்! காங்கிரஸ் தப்பியது! -
விஜய்க்கு அடிமேல் அடி.. ஸ்டாலின் - எடப்பாடி - சீமானிடம் பின்தங்கிய தவெக.. இந்த 2 மேட்டரை கவனிச்சீங்களா -
10 நாள்தான் டைம்! வீடு வீடாக போய் ஓட்டு கேளுங்க! நீலாங்கரை வீட்டுக்குள் இருந்தபடியே விஜய் அறிவுரை -
மொத்த பேரையும் பிடித்த விஜய் ஃபீவர்.. தமிழக அரசியலில் ஒரு புது பூகம்பம்.. ஓட்டு வருமா? -
“ஜனநாயகன் லீக்.. அதிர்ச்சியளிக்கிறது!” அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த ரஜினிகாந்த் -
எடப்பாடி பழனிசாமிக்கு 'செக்' வைக்கும் விஜய்! களமிறங்கும் ரகசிய வேட்பாளர்.. அதிர்ச்சியில் அதிமுக -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி












Click it and Unblock the Notifications