விஜய் முதல் நாளே சம்பவம் ஒரே கல்லில் 3 மாங்காய்! பெண்கள், இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் 3 தரப்புக்கு 3 திட்டங்கள்

Subscribe to Oneindia Tamil

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உடனேயே தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மூன்று முக்கிய திட்டங்களுக்கு ஒரே நேரத்தில் கையெழுத்திட்டார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின் மேடையிலேயே இந்த மூன்று திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. இது ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்தது போன்று பெண்கள், இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் ஒரே நேரத்தில் கவரும் வகையில் 3 தரப்புக்கும் சேர்த்து 3 திட்டங்கள் அறிவித்தார்.

Tvk Vijay politics vijay first day as cm three schemes 200 unit free electricity tamil nadu singappen women safety force anti narcotics force tamil nadu vijay one stone three mangoes vijay mass first day announcement tamil nadu cm vijay electricity scheme vijay oath ceremony three projects free power for families tamil nadu women safety task force vijay drug free tamil nadu force tvk government first decisions vijay signs three schemes day one tamil nadu new cm major announcements vijay targets women youth families 3 200 3 3 3

பதவியேற்பு விழாவில் முதல் மூன்று அரசாணைகள்

பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்துகொண்ட விஜய், உடனடியாக மூன்று முக்கியக் திட்ட அறிக்கையில் கையெழுத்திட்டார்.

பெண்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பஸ்தர்கள் ஆகிய மூன்று முக்கிய தரப்பினரின் நலனை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டங்கள், புதிய அரசின் முதல் மூன்று அரசாணைகளாக அமைந்துள்ளன.

குடும்பஸ்தர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்

முதல் திட்டமாக, ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு விஜய் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய். இரு மாதங்களுக்கு 500 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாகக் கிடைக்கும். இது தவெகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. குடும்பஸ்தர்களின் மாதாந்திர மின்சாரக் கட்டணச் சுமையை கணிசமாகக் குறைக்கும் இந்தத் திட்டம், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்களின் பாதுகாப்புக்கு 'சிங்கப்பெண்' அதிரடிப்படை

இரண்டாவது திட்டமாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கவும் 'சிங்கப்பெண்' என்ற பெயரில் ஒரு தனிப்பட்ட அதிரடிப்படையை உருவாக்க விஜய் உத்தரவிட்டார். இந்தப் படை பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விரைவாகக் கையாளும் வகையில் அமைக்கப்படும். பெண்கள் அச்சமின்றி வாழவும், நடமாடவும் உதவும் இந்தத் திட்டம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாகும்.

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு

மூன்றாவது திட்டமாக, தமிழ்நாட்டை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில் 'ஆன்டி நார்கோடிக்ஸ் ஃபோர்ஸ்' (போதைப்பொருள் தடுப்புப் படை) ஒன்றை உருவாக்க விஜய் உத்தரவிட்டார். இந்தப் படை மாநிலம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் செயல்படும்.

குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையைத் தடுப்பது, இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை இந்தப் படை முன்னெடுக்கும். இது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் முக்கிய திட்டமாகும்.

விஜய் பதவியேற்பு விழாவில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+