மக்களுக்கு தேவையானதையே சட்டமாக்க வேண்டும்.. அவர்களை அடைக்க கூடாது.. சிஏஏவை விமர்சித்து விஜய் அதிரடி!
மக்களுக்கு எது தேவையோ அதை தான் சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது, என்று சிஏஏவை விமர்சனம் செய்து நடிகர் விஜய் பேசியுள்ளார்.
சென்னை: மக்களுக்கு எது தேவையோ அதை தான் சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது, என்று சிஏஏவை விமர்சனம் செய்து நடிகர் விஜய் பேசியுள்ளார்.
Recommended Video
மாஸ்டர் படம் தற்போது கோலிவுட்டின் மிகப்பெரிய படமாக உருவாகி வருகிறது. மல்டி ஸ்டார் படமாக விஜய் நடிக்கும் இந்த படம் உருவாகி வருகிறது
மாநகரம் எடுத்து ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு வில்லனாக நடித்து உள்ளார். நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் சிங்கிள் பாடலுக்கு ஒரு குட்டி கதை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பாடல் இன்று வெளியானது. இதன் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நடந்தது.

விஜய் என்ன சொன்னார்
இந்த நிலையில் மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் தனது ரசிகர்களுக்கு மன்னிப்பு கேட்டார். அவர் தனது பேச்சில், கடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு சில விஷயங்கள் நடந்தது. அதனால் இந்த முறை ரசிகர்கள் இல்லாமல் ஆடியோ வெளியீட்டு விழா நடந்து இருக்கிறது. எனக்கும் இது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

மன்னிப்பு கேட்டார்
அதனால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் எப்போதும் ஆடியோ லாஞ்சில் குட்டி ஸ்டோரி சொல்வேன். இந்த முறை ஆடியோ லாஞ்சில் குட்டி ஸ்டோரி பாடலும் வெளியாகி உள்ளது. எப்போது நண்பர் அஜித் மாதிரி கோட் ஷூட் போட்டு வந்திருக்கிறேன். நான் எப்படி அழகா இருக்கேனா?. நான் சரியாக டிரெஸ் போடுவதில்லை என்ற புகாரை இப்போது சரி செய்துள்ளேன்.

வாழ்க்கை எப்படி
வாழ்க்கை நதி மாதிரிநம்மள வணங்குவாங்க, வரவேற்பாங்க , கல்லு எரிவாங்க. ஆனா கடமையை செஞ்சுட்டு போயிட்டே இருக்கனும். நம்மை எதிர்ப்பவர்களை சிரிப்போடு எதிர்கொள்ள வேண்டும். அவர்களை நம் சிரிப்பால் சாகடிக்க வேண்டும்

சிஏஏ சட்டம்
மக்களுக்கு எது தேவையோ அதை தான் சட்டமாக்க வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதற்குள் மக்களை அடைக்கக் கூடாது. நம்மை புடிக்காதவங்க நம்ம மேல கல் எறிவாங்க.. சிரிப்பாலயே அவங்கள கொல்லணும், என்றார். இந்த நிலையில் தொகுப்பாளர், 20 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த விஜயிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டுமென்றால் என்ன கேட்பீர்கள்?

ரெய்டு
அதற்கு விஜய், என் அப்பா மாதிரி சந்தோசமாக வாழனும் என்று நினைப்பேன். ரெய்டு எல்லாம் இல்லாத அந்த அமைதியான வாழ்க்கை வேணும்னு கேட்பேன்.உண்மையா இருக்கனும்னா சில நேரத்தில் ஊமையாகவும் இருக்கனும்.,என்று குறிப்பிட்டார். அவரின் இந்த அரசியல் பேச்சு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
-
விஜய் போட்ட உத்தரவு.. 5 நாள் தான் டைம்.. வீடு கட்டுவோருக்கு மெகா குட்நியூஸ்! -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்!












Click it and Unblock the Notifications