''என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்''.. நோட் பண்ணீங்களா.. விஜயிடம் கம்யூனிச வாசம்?
சென்னை: தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் விடுத்துள்ள நன்றி அறிக்கையில், ''என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்'' என்று அவர் குறிப்பிட்டிருப்பதன் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார்.
எப்படி என்று கேட்கத் தோன்றுகிறதா, கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் பொதுவாக தோழர்கள் என்று அழைப்பார்கள். அதேபோல் விஜயும் தனது கட்சியினரை தோழர்கள் என்றே குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் விஜயிடம் லேசாக கம்யூனிச வாசமும் வீசுவது கவனிக்கத்தக்கது. தமிழ்நாட்டை பொறுத்தவரை பொதுவாக அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சியினரை உற்சாகப்படுத்த உடன்பிறப்புகளே, ரத்தத்தின் ரத்தங்களே, பாட்டாளி சொந்தங்களே, மக்களே, அன்புச் சகோதர சகோதரிகளே, தம்பிகளே தங்கைகளே, என்று அழைப்பார்கள்.

அந்த வகையில் விஜய் தனது கட்சியினரை ''என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே'' எனக் குறிப்பிட்டு கவனம் ஈர்த்துள்ளார். அதேபோல் விஜய் தனது நன்றி அறிக்கையில் எடுத்த எடுப்பிலேயே, முதல் வார்த்தையாகவே தமிழ்நாடு என்ற வார்த்தையை கொண்டு வந்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்பதற்கு பதில் தமிழ்நாடு வெற்றி கழகம் என்று விஜய் பெயர் சூட்டியிருக்கலாமே என கடந்த 2 நாட்களாக பலரும் கருத்து தெரிவித்த நிலையில் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு தான் தாம் அரசியல் பயணத்தை தொடங்கியிருப்பதாக கூறியுள்ளார்.
கத்தி திரைப்படத்தில் கம்யூனிசம் என்றால் என்ன என்பது பற்றி சிறுமி ஒருவரிடம் விஜய் விளக்கம் அளிக்கும் காட்சி இங்கே நினைவுகூறத்தக்கது. அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கும் போதே தன்னை மதச்சார்பின்மை தலைவராக விஜய் சூசகமாக தெரிவித்திருந்தார்.
இதனிடையே பாசத்திற்குரிய தாய்மார்கள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள் எனவும் இன்று வெளியிட்ட தனது நன்றி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் விஜய். கே.எஸ்.அழகிரி, உதயநிதி, உள்ளிட்ட பலரும் விஜய் அரசியல் கட்சி தொடங்குவதை வாழ்த்தி வரவேற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications