டீசலில் கலப்படம்! ரிப்பேரான கார்! ரூ 3 லட்சம் செலவு! பெட்ரோல் பங்கில் குமுறிய மாகாபா ஆனந்த்!
சென்னை: சென்னையில் ஒரு பிரபல நிறுவனத்தின் பெட்ரோல் பங்கில் தனது சொகுசு காருக்கு டீசல் போட்ட போது அதில் தண்ணீர் கலந்து மோசடி செய்ததால் தனது கார் ரிப்பேராகி ரூ. 3 லட்சம் செலவு செய்ததாக விஜய் டிவி ஆங்கர் மாகாபா ஆனந்த் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் கூறியிருப்பதாவது: டீசல்ல தண்ணீர் கலந்ததால கார் ரிப்பேராகி 3 லட்சம் செலவாகிடுச்சு. இது ஆதாரத்தோட நிரூபிச்சதும் கோர்ட்டுக்கு போயிடாதீங்க, 80 ஆயிரம் தரோம்னு பெட்ரோல் பங்க் நிர்வாகம் பேரம் பேசுறாங்க.

உங்கள நம்பிதானே பெட்ரோல், டீசல் போட வரோம். ஆனால் இப்படி பண்ணா டீசலையும் இனி மக்களே தயாரிக்கணுமா? இந்த பங்க் மேல இருந்த நம்பிக்கையே போயிடுச்சு என விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் குமுறியுள்ளார்.
இவர் தற்போது விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், அது இது எது, அண்டாகாகசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவருக்கு ஒரு எபிசோடை தொகுத்து வழங்க ரூ 2 லட்சம் முதல் ரூ 3 லட்சம் வரை ஊதியம் வாங்குகிறார் என சொல்லப்படுகிறது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக விஜய் டிவியில் பணியாற்றி வரும் இவர், பல்வேறு எஃப்.எம். ரேடியோக்களில் ஆர்.ஜே.வாகப் பணியாற்றிய ஆனந்த், "சினிமா காரம் காபி" என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தார். இந்த நிகழ்ச்சி அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.
இதற்கிடையே, "அது இது எது" என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த சிவகார்த்திகேயன் வெள்ளித்திரைக்குச் சென்றதால், அந்த நிகழ்ச்சியை யார் நடத்துவது என்ற கேள்வி எழுந்தது. அப்போது, அந்த நிகழ்ச்சி மாகாபா ஆனந்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியில் இருந்தே இவருடைய புகழ் அதிகரித்தது. இதையடுத்து, விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சிகளான சூப்பர் சிங்கர், கிங்ஸ் ஆஃப் டான்ஸ், மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை, கலக்கப்போவது யாரு, சவுண்ட் பார்ட்டி, ஊ சொல்றியா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார்.
விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளரான மாகாபா ஆனந்தில் இருக்கும் 'மாகாபா' என்பது அவருடைய இனிஷியலாக இருக்கும் என்று ஆரம்பத்தில் பலர் நினைத்தனர். ஆனால் அதுதான் இல்லையாம்.
இதுகுறித்து மாகாபா ஆனந்த் கூறுகையில், "முதலில் நான் சூரியன் எஃப்.எம்.-மில் பணியாற்றினேன். பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ரேடியோ மிர்ச்சியில் வேலை கிடைத்தது. ஆனால், சென்னைக்குச் செல்லுமாறு கேட்டார்கள்.
அப்போது எனது மனைவி கர்ப்பமாக இருந்ததால், அவரைக் கோயம்புத்தூரில் தனியாக விட்டுவிட்டுச் செல்ல எனக்கு மனமில்லை. அதனால், கோயம்புத்தூரிலேயே வேண்டும் என்று அடம்பிடித்தேன்.

எஃப்.எம். மார்க்கெட்டிங் விவரங்களுக்கான ஐ.எம்.ஆர்.பி. (IMRB) கணக்கெடுப்பில் என் பெயர் வந்தது. அப்போது எனது பெயரை மாற்றிக்கொள்ளுமாறு கேட்டார்கள். நானும் என்ன மாற்றலாம் என்று யோசித்தபோது, எனது பாஸ் மிர்ச்சி செந்தில்தான் 'மா.கா.பா.' என்று என் பெயருக்கு முன்னால் ஒரு அடைமொழியைக் கொடுத்தார்.
'மாகாபா' என்றால் இந்தியில் 'அம்மாவுடைய அப்பா' என்று அர்த்தமாம். பின்னர் அதுவே எனது பெயராகிவிட்டது. இந்த பெயரை நான் கெசட்டிலும் சேர்க்கவில்லை. மற்றபடி எல்லாரும் அழைப்பது 'மாகாபா'தான்" என்று ஆனந்த் தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications