பிளாக்கில் டிக்கெட் விற்பதை நிறுத்திட்டு.. அரசியல் கலாச்சாரத்தை பற்றி பேசுங்க விஜய்! - கோகுல இந்திரா
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் 3வது ஆண்டு துவக்க நிகழ்ச்சியில் பேசிய விஜய், "டப்பா எஞ்சின், ஓட்டை எஞ்சின் என எவ்வளவு என்ஜின் வந்தாலும்.. டாப் எஞ்சின் தமிழக வெற்றிக் கழகம்தான்" என்று அதிமுகவையும், அதன் கூட்டணியையும் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்து இருந்தார். விஜயின் பேச்சுக்கு அதிமுக தரப்பில் இருந்து பதிலடிகள் வலுத்துள்ளன.
அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா இது குறித்து பேசுகையில், "நாங்கள்தான் டாப் எஞ்சின் என்று விஜய் கூறுகிறார். இரண்டு எஞ்சின் ஓடாது என்றும் சொல்கிறார். இப்படி பேசும் விஜய், டாப் எஞ்சின் போட்டு ஒழுங்காக திருச்சியில் இருந்து கிளம்பி கரூருக்கு வந்திருந்தால், அந்த 41 பேர் இறந்திருக்க மாட்டார்கள். என்ஜினை மெதுவாக ஓடவிட்டு, வரும் வழி எல்லாம் படப்பிடிப்பு நடத்திக் கொண்டு வந்ததால், 41 பேரின் உயிர் பறிபோய் இருக்கிறது. இதையெல்லாம் சிந்திக்காமல் அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.

ஆள் பிடிக்கும் வேலை
சம்பவம் நடந்த உடனேயே அங்கிருந்து விமானத்தில் பறந்து சென்று, வீட்டை பூட்டிக் கொண்டு அமர்ந்திருந்த விஜய், பெரிய மனிதர் கிடையாது. டப்பா என்ஜின், ஓட்டை என்ஜின் என.. இந்த மாதிரியான விமர்சனங்களை வைத்து, தன்னைத்தானே மிகைப்படுத்திக் கொண்டு, எந்த கட்சியில் யார் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார்களா.. அவர்களை எல்லாம் ஆள் வைத்து பிடிக்கும் வேலையை விஜய் செய்து கொண்டிருக்கிறார்.
அதிமுக ஆட்சி
விஜயுடன் இருக்கும் 90% பேர், மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள். ஆள் பிடிக்கிற வேலையை பார்த்து, முதலில் அவர் தனது கட்சியை பலப்படுத்திக் கொள்ளட்டும். நாங்கள் உறுதியானவர்கள், எங்கள் தலைவர்களுக்கு விசுவாசமானவர்கள். எனவே, எங்கள் மீது புகார் சொல்லிக் கொண்டிருக்கிறார். விஜய் வைக்கும் விமர்சனத்திற்கு நாங்கள் சொல்வது இதுதான், அதிமுக தலைமையில் ஒரு ஆட்சி அமைக்கப் போகிறோம்.
பத்திரிகையாளர்களை சந்திக்காதவர்
இதுதான் எங்கள் கொள்கை, இதுதான் எங்கள் கோட்பாடு, எங்களுடைய நிலைப்பாடு இதுதான், திட்டம் இதுதான், என்று பேசாதவர் விஜய். ஆனால், நாங்கள் மக்களுக்கு நல்லது செய்கிறோம் என்று மட்டும் கூறிக் கொண்டிருக்கிறார். பத்திரிக்கை துறையை பார்க்காதவர், பத்திரிக்கை நண்பர்களை சந்திக்காதவர், தன்னுடைய நிலைப்பாடுகளை மிகத் தெளிவாக சொல்வதற்கு கூட அஞ்ச கூடியவர்தான் விஜய்.
முதலில் இதை செய்யட்டும்
இவர் ஊழலை பற்றி பேசவே கூடாது. இவர் முதலில் பிளாக்கில் தன் படத்திற்கு டிக்கெட் வாங்காதீர்கள் என்று சொல்லட்டும். அதிகமாக பணம் கொடுத்து டிக்கெட் வாங்காதீர்கள், என்னுடைய கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யாதீர்கள், ஒரு தியேட்டரில் எவ்வளவு பேர் அந்த ஷோவை பார்க்க முடியுமோ.. அவ்வளவு பேர் மட்டும் பார்த்தால் போதும், ப்ளாக்கில் எதுவும் செய்யாதீர்கள் என சொல்லட்டும். முதலில் அந்த கலாச்சாரத்தில் இருந்து வெளியில் வரட்டும். பிறகு மற்றவை பேசிக்கொள்ளலாம்" என்று கூறி இருக்கிறார்.
-
நீட் பயிற்சி மையத்திற்கு ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? அனிதா மரணத்திற்கு ஆறுதல் சொன்னது பொய்யா? -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா? -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
தன்னையும், மக்களையும் நம்பாதவர்தான்.. 2 தொகுதியில் போட்டியிடுவார்! அட்டாக் மோடில் சீமான் -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன்












Click it and Unblock the Notifications