விஜய் ராகுலை சந்தித்தாரா? விஜயதரணியை லாக் செய்த பாஜக! சொன்னேனே கேட்கலையே..செல்வப் பெருந்தகை சுளீர்!
சென்னை: காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்திருக்கும் விஜயதரணி தனக்கு பதவி வேண்டும் என அண்ணாமலை முன்னிலையில் பொது மேடையிலேயே பேசி இருக்கிறார். இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு வரச் சொன்னதே ராகுல் காந்தி தான் என பேச அதற்கு பதில் அளித்திருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை. மேலும் விஜயதரணியை பாஜகவினர் 'லாக்' செய்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸில் மிகவும் பிரபலமான முகங்களில் முக்கியமானவர் விஜயதரணி. கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர்.

சட்டமன்ற தொகுதியிலேயே எத்தனை நாள் தான் இருப்பது.. தேசிய அரசியலில் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதுமே விஜயதரணிக்கு உண்டு. அதன் காரணமாக கடந்த தேர்தலிலும் அதற்கு முந்தைய தேர்தலிலும் மக்களவைத் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி வந்தார்.
ஆனால் அப்போது எம்பி தேர்தலில் வசந்தகுமார் போட்டியிட்டு காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்றார். அவரது மறைவுக்கு பிறகு தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்தார் விஜயதரணி. ஆனால் அவரைவிட இளையவரான வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு எம்பி சீட்டு ஒதுக்கப்பட்டது. இதனால் கடும் அதிர்ச்சியில் இருந்தார். அதனை தொடர்ந்து சீனியரான தனக்கு தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார்.
ஆனால் அந்த பொறுப்பும் செல்வப் பெருந்தகைக்கு போனதைத் தொடர்ந்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்பு மாற்றப்படலாம் என தகவல் வெளியான நிலையில் டெல்லிக்குச் சென்று கட்சித் தலைவர் பதவியை கைப்பற்ற முயற்சித்து வந்தார். ஆனால் அப்போதும் செல்வப் பெருந்தகை காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இப்படியாக காங்கிரஸ் கட்சியில் தனக்கான வாய்ப்புகள் அடுத்தடுத்து பறி போனதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் அவர் பாஜகவில் ஐக்கியமாக திட்டமிட்டார்.
குறிப்பாக மக்களவை தேர்தலுக்கு முன்பாகவே அவர் பாஜகவில் இணைந்தார். அமித்ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் உடனும், தமிழக பாஜக தலைவர்களுடனும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். மக்களவைத் தேர்தலில் தனக்கு கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த அவர் அமித்ஷாவிடம் நேரடியாகவே முறையிட்டதாக கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் தேர்தலும் முடிவடைந்து விட்டது. கட்சியிலாவது தனக்கு பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த விஜயதரணிக்கு மீண்டும் ஏமாற்றமே கிடைத்தது. இதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனக்கு பொறுப்பு வழங்க வேண்டும் எதிர்பார்த்துதான் பாஜகவுக்கு வந்திருக்கிறேன் என அண்ணாமலை முன்னிலையில் மேடையிலேயே பேசினார்.
இது கடந்த சில நாட்களாகவே பேசு பொருளாக இருக்கிறது. இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றியிடம் பேசிய விஜயதரணி ராகுல் காந்தி சொல்லித்தான் விஜய் அரசியலுக்கு வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்தியை விஜய் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் தனக்கு பொறுப்பு வேண்டும் என கேட்டதாகவும், உங்களுக்கு இருக்கும் செல்வாக்குக்கு நீங்கள் தனியாகவே கட்சி ஆரம்பிக்கலாமே என ராகுல் காந்தி சொன்னதாகவும், அதற்குப் பிறகு கட்சி ஆரம்பித்ததாக சொல்லி இருந்தார்.
இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆன செல்வப் பெருந்தகை. இது தொடர்பாக பேசிய அவர் விஜயதரணியை பாஜகவினர், அறைக்குள் விட்டு பூட்டியது போல லாக் செய்து இருக்கின்றனர். அவர் பாஜகவிற்கு செல்கிறார் என தகவல் வந்தபோது, நானே தொடர்பு கொண்டு பாஜகவில் சேர வேண்டாம். வேறு கட்சியில் வேண்டுமானால் சேர்ந்து கொள்ளுங்கள் என கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. தற்போது எம்.எல்.ஏ பதவியும் போய், கட்சிப் பதவியும் இல்லாமல் இருக்கிறார்.
மேலும் ராகுல் காந்தி சொல்லித்தான் விஜய் கட்சி ஆரம்பித்தார் என்பது தவறு. பத்தாண்டுகளுக்கு முன்பாக ராகுல் காந்தியை விஜய் சந்தித்தார். அப்போது பேசியிருக்க வாய்ப்பில்லை. மேலும் கடந்த சில ஆண்டுகளில் ராகுல் காந்தி விஜய் சந்திக்கவில்லை. ஒருவேளை அப்படி சொல்லி இருந்தால், ராகுல் காந்தியிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன்" எனக் கூறியிருக்கிறார்.
-
தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் திமுக அரசுக்கும் என்ன சம்பந்தம்? - விஜய்க்கு மா.சுப்பிரமணியன் கேள்வி -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! திமுகதான் காரணமா? பெரம்பூர் தொகுதி தேர்தல் அலுவலர் விளக்கம் -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
பெண்களுக்காக புகார் கொடுக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? உங்களுக்கு போட்டியே நான் தான்! ஜூலியின் புது வீடியோ -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
நாளை மறுநாள் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விஜய்.. புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிவிப்பு! -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு!











Click it and Unblock the Notifications