விஜயகாந்தின் வித்தியாசமான பழக்கம் தெரியுமா? பசுமையான நினைவுகளை கண்ணீருடன் அசை போட்ட ராதாரவி
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் வித்தியாசமான ஒரு பழக்கம் இருக்கிறது. அது என்ன தெரியுமா?
மதுரையில் விஜயராஜ் அழகர்சாமியாக 1952-ஆம் ஆண்டு பிறந்தவர்தான் விஜயகாந்த். இவர் ரைஸ் மில் அதிபரின் மகனாக பிறந்தாலும் இயல்பாகவே இளகிய மனம் படைத்தவர். ரைஸ் மில்லில் அனைவருக்கும் உதவுவாராம்.

ஒரு முறை ரைஸ் மில்லில் வேலை செய்த தொழிலாளி தனது மகளின் திருமணத்திற்கு பணம் இல்லாமல் தவித்தாராம். அப்போது விஜயகாந்திடம் வந்து சொன்னாராம். உடனே விஜயகாந்த் சற்றும் யோசிக்காமல் தன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கழற்றி கொடுத்தாராம்.
அந்த சங்கிலி அவருடைய தந்தை, விஜயகாந்திற்கு ஆசையாக வாங்கிக் கொடுத்தாராம். வீட்டிற்கு சென்று சட்டையை கழற்றிய போது விஜயகாந்தின் அப்பா பார்த்துவிட்டாராம். உடனே கழுத்தில் இருந்த சங்கிலி எங்கே என கேட்டாராம். அதற்கு அவர் நடந்ததை சொல்லியுள்ளார். உடனே விஜயகாந்தை அவரது தந்தை அடித்தாராம்.
இதையடுத்து அப்போது முதல் விஜயகாந்த் வைராக்கியம் கொண்டாராம். இனி தான் சம்பாதிக்கும் பணத்தில் பிறருக்கு உதவி செய்யவேண்டும். அப்பாவின் பணத்தை எடுக்கக்கூடாது என முடிவு செய்தாராம். அதன் பிறகு அப்பாவின் நிழலில் இருக்க விரும்பாமல் சென்னைக்கு வந்து சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்து பின்னர் அசைக்க முடியாத சக்தியாக இருந்தார்.
ஒரே ஆண்டில் 18 படங்களில் கூட நடித்தார். நியாயவாதி, குணவாளன், நல்ல மனவாளன், பண்புடையவர், நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்தவர். இப்படிப்பட்ட விஜயகாந்திற்கு ராதாரவி, எஸ் எஸ் சந்திரன், பாண்டியன், தியாகு, வாகை சந்திரசேகர் ஆகிய 5 பேரும் நண்பர்கள். விஜயகாந்த் இறப்பால் தியாகு, ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோர் உடைந்துள்ளனர்.
இந்த நிலையில் விஜயகாந்த் குறித்து ராதாரவி ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: விஜிம்மா என்றுதான் நான் அழைப்பேன், அவர் என்னை டேய் ரவி என்பார். விஜயகாந்த் கள்ளம் கபடமற்றவர். அவர் கட்சி ஆரம்பித்த 2005 ஆம் ஆண்டு திமுக ஆட்சி இருந்தது. அப்போது அவர் திமுகவை எதிர்த்துதான் பேச முடியும். அப்படிப்பட்ட நிலையிலும் தான் கட்சி ஆரம்பிப்பதை முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் போய் கூறி ஆசி வாங்கினார்.
நான் விஜிம்மாவை திட்டினேன். அப்படிப்பட்ட சூது வாது தெரியாதவர். எங்கள் கையின் அடிப்பகுதியில் நறுக்கென கிள்ளுவார். உயிர் போகிறபடி வலிக்கும். அப்படி தோளில் கை போட்டால் உடும்பு பிடிப்பது போல் இருக்கும். மன தைரியம் கொண்டிருந்தார். இவ்வாறு ராதாரவி தெரிவித்தார்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications