விஜயகாந்த்துக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறி இல்லை.. விரைவில் டிஸ்சார்ஜ்.. மியாட் அறிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா நோய்த்தொற்று அறிகுறி இல்லை என்று மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தேமுதிக நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த் கொரோனாவால் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Vijayakanth health is improved, MIOT hospital says in a bulletin

இந்த நிலையில் அவரது மனைவியும் தேமுதிக பொருளாளருமான, பிரேமலதா விஜயகாந்துக்கும் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரும் மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரித்வி மோகன்தாஸ் இன்று காலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

Vijayakanth health is improved, MIOT hospital says in a bulletin

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செப்டம்பர் 28ஆம் தேதி கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு நோய்த்தொற்று உறுதியாகி சென்னை மியாட் மருத்துவமனையில் செப்டம்பர் 29-ம் தேதியன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நிலை சீராக உள்ளது.
மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

பிரேமலதா விஜயகாந்தின் முதல் நிலை பரிசோதனைக்கு பின் தேமுதிக நிறுவனர் தலைவர் மற்றும் கழக பொதுச் செயலாளருமான விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவரின் உடல்நிலை சீராக உள்ளது. நோய்க்கான அறிகுறி இல்லை. தொடர் மருத்துவ சேவைகளால் அவர் நல்ல முன்னேற்றம் அடைந்து இருக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+