தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உயிர் எதனால் பிரிந்தது.. மியாட் மருத்துவமனை அறிக்கை
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக உயிரிழந்துவிட்டார் என மியாட் மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது.
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அவருக்கு தொடர்ந்து காய்ச்சல், சளி இருந்தது.

இதனால் அவருடைய சளி மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவருக்கு இணைநோய்கள் இருந்து வரும் நிலையில் கொரோனா பாதித்துள்ளதால் அவருக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் போராடி னர். ஆனால் தொடர்ந்து அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை வெளியானது.
அதில் "விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பணியாளர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் அவர் இறந்துவிட்டார்" என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications