விஜயகாந்தையும் விடாத டிசம்பர் மாதம்.. வருட கடைசியில் பீதியாகும் மக்கள்.. இது உண்மையா?
சென்னை: பெரியார், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் டிசம்பரில் தான் மறைந்தார். அந்த வரிசையில் கேப்டன் விஜயகாந்தும் டிசம்பர் மாதத்தில் தான் மறைந்துள்ளார். இதனிடையே கடந்த சில வருடங்களாக வருட கடைசி ஆனாலே இயற்கை சீற்றங்களும், தலைவர்கள் மரணமும் நடப்பது வாடிக்கையாக இருக்கிறது.
தமிழகத்தில் அரசியலில், திரைத்துறையில் ஆளுமை செலுத்திய முக்கிய தலைவர்கள் பலர் டிசம்பரில் தான் மரணம் அடைந்தனர். திராவிட கழகத்தின் முதுப்பெரும் தலைவர் பெரியார் (ஈவேராமசாமி), நேரடியாக அரசியலில் இறங்கி தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், அவரதுவழியை பின்பற்றி தான் இன்றைய திமுக, அதிமுக கட்சிகள் செயல்படுகின்றன.

இன்றைக்கு திமுக, அதிமுகவிற்கான விதையை ஆரம்பித்து வைத்தது பெரியார் தான். பெரியார் உருவாக்கிய இயக்கத்தில் இருந்து வந்த அண்ணா தான் திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். அண்ணாவின் மீது அதிக பற்று வைத்திருந்த எம்ஜிஆர் அதன்பின்னர் அதிமுக தொடங்கினார். எனவே தமிழ்நாட்டை ஆளும் மற்றும் எதிர்க்கட்சிக்கு விதை போட்டது பெரியார் தான். பெரியார் 1973 டிசம்பர் 24ம் தேதி இயற்கை எய்தினார்.
அதேபோல் அண்ணாவின் வழியில் வந்த எம்ஜிஆர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், புரட்சி தலைவர் என பல பட்டங்களுடன் மக்களால் அழைக்கப்பட்டார். தமிழ் திரையுலகம் மற்றும் தமிழக அரசியலில் மிகப்பெரிய உச்சம் தொட்டார். முதல்வராக இருந்தபோதே மரணம் அடைந்தார். கடந்த 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
எம்ஜிஆர் மரணத்திற்கு பிறகு அரசியலில் விஸ்வரூருபம் எடுத்த ஜெயலலிதா, 1991ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார். மீண்டும் 2001ம் ஆண்டிலும், 2011ம் ஆண்டிலும், 2016ம் ஆண்டிலும் முதல்வரானார். தொடர்ந்து இரண்டு முறை சட்டசபை தேர்தலில் எம்ஜிஆருக்கு பிறகு வென்று ஆட்சிக்கு வந்தது ஜெயலலிதா தான். இவரை அம்மா என அதிமுகவினரும் பொதுமக்களும் அழைத்தனர். கடந்த 2014ம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா, அதன்பிறகு பல்வேறு உடல் உபாதைகளால் சிரமப்பட்டு வந்தார். கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா, அதே 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார்.
பெரியார், எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் போல் மூத்த பத்திரிக்கையாளரான சோவும் டிசம்பரில் மரணம் அடைந்தார். அரசியல் சாணக்கியராக அறியப்படும் சோ, கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி மரணம் அடைந்தார்.
இந்த வரிசையில் கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் டிசம்பர் 28ம் தேதி மரணம் அடைந்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 'வெண்டிலேட்டர்' ஆதரவுடன் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் மருத்துவ பணியாளர்களின் கடின முயற்சி இருந்த போதிலும் நேற்று காலை காலமானார். இந்த தகவலை மருத்துவனை தெரிவித்தது.
இதனிடையே டிசம்பர் மாதம் வந்தாலே பெரிய இயற்கை பேரழிவு நடக்கிறது. தலைவர்கள் இறக்கிறார்கள். இதுவரை நடந்த சுனாமி, நிலநடுக்கம் , பெருமழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் வந்தன. கடந்த 2015ம் ஆண்டில் டிசம்பரில் தான் பெரும் வெள்ளம் வந்தது.. அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரில் இயற்கை சீற்றங்கள் வாடிக்கையாக உள்ளன. இதேபோல் 2016ம் ஆண்டில் ஜெயலலிதா மரணம் அடைந்தார். அதே ஆண்டில் சோவும் மறைந்தார். முன்பு தலைவர்கள் , திரை நட்சத்திரங்கள் பலர் டிசம்பரில் தான் மரணம் அடைந்துள்ளனர். அந்தவகையில் விஜயகாந்தையும் டிசம்பர் காவு வாங்கியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications