Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்.. வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் அஞ்சலி.. 3000 போலீசார் பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடல் கொண்டு வரப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியல் மற்றும் சினிமா உலகில் முத்திரை பதித்த விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 71. விஜயகாந்த் மரண செய்தியை கேட்டு பிரேமலதா உடைந்து போனார். துக்கம் தாங்காமல் கண்ணீர்விட்டு கதறி அழுதார். மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் பிரேமலதாவை ஆறுதல்படுத்தினார்கள். தேமுதிகவினரும் விஜயகாந்த் மறைந்துவிட்டாரே என்று கண்ணீர்விட்டு கதறினார்கள்.

Vijayakanths body is brought to the theevu thidal: thousands of police for security to avoid congestion

இதனையடுத்து மியாட் மருத்துவமனையில் இருந்து விஜயகாந்த் உடல் சாலிகிராமம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தேமுதிக அலுவலகத்திற்கு விஜயகாந்த் உடல் வருகிறது என தெரிந்தவுடன் லட்சக்கணக்கான தொண்டர்கள் அங்கு குவியத் தொடங்கினர். விஜயகாந்த் ஊர்வலம் சாலிகிராமத்திலிருந்து கோயம்பேடு வர 4 மணி நேரம் எடுத்துக் கொண்டது.

கோயம்பேடு அலுவலகத்தில் விடிய விடிய பொதுமக்கள், ரசிகர்கள், விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். கோயம்பேடு பகுதி நெரிசல் மிக்கது என்பதால் விஜயகாந்த் உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடல் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, இன்று காலை 4.50 மணிக்கு விஜயகாந்தின் உடல் கட்சி அலுவலகத்திலிருந்து தீவுத்திடல் நோக்கி பயணத்தை தொடங்கியது.

தற்போது சென்னை தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக விஜயகாந்த் உடல் தீவுத்திடல் கொண்டு வரப்படுவது அறிந்து முன்கூட்டியே அவரது ரசிகர்கள் தொண்டர்கள் அங்கு குவிந்தனர். எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க அங்கு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.

குறிப்பாக பொதுமக்கள் கூட்ட நெரிசல் இன்றி அஞ்சலி செலுத்திவிட்டு செல்லும் வகையில் அங்கு பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் பொதுமக்கள் அமரும் வகையில் 2 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டன. மேலும் பாதுகாப்பிற்காக சென்னை தீவுத்திடலில் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் தீவுத்திடலில் மாநகராட்சி சார்பில், மக்களுக்கு குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இதேபோல் தீவுத்திடல் சாலைகளில் கனரக வாகங்களுக்கு அனுமதி இல்லை. வெளியூர்களில் இருந்து வருபவர்கள் வாகனங்களை நிறுத்திக்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மொத்தமாக சென்னை தீவுத் திடலில் பொதுமக்கள் அமர 2,000 இருக்கைகள், பிரமுகர்கள் அமர 100 இருக்கைகள், 15 இடங்களில் நடமாடும் கழிவறைகள், பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த தனிப் பாதை, பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளன.தற்போது 6.55 மணியளவில் இருந்து விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்னை தீவுத்திடலுக்கு குவிந்து வருகின்றனர். நீண்ட வரிசையில் காத்திருந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+