இந்திய மேலாளர் vs ஜப்பான் மேனேஜர்! லீவு கேட்டதுக்கு பதிலை பாருங்க! நம்மாளுங்க திருந்த மாட்டாங்க
சென்னை: வேலை-வாழ்க்கை இரண்டையும் சமமாக பேலன்ஸ் செய்து போக வேண்டும். அப்போதுதான் இரண்டும் சரியாக இருக்கும். ஆனால், இந்தியாவில் இதற்கான சாத்தியமே இல்லை என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் ஊழியர் ஒருவர் தனது இந்திய மேனேஜர் மற்றும் ஜப்பான் மேனேஜரிடம் லீவு கேட்டபோது அவர்கள் என்ன ரிப்ளை கொடுத்தார்கள் என்பதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ரெடிட் சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். இந்த போஸ்ட் பரவலாக ஷேராகி வருகிறது.
இந்த ஊழியர், தற்போது ஜப்பான் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதற்கு முன்னர் ஒரு இந்திய நிறுவனத்தில் பணியாற்றியிருந்தார். அங்கு வேலை செய்தபோது, குடும்ப விஷயம் தொடர்பாக அவசரமாக வெளியூர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. அவருக்கு 7 நாட்கள் கேஷுவல் லீவு பெண்டிங்கில் இருந்தது. எனவே மேனேஜரிடம் லீவு அப்ளை செய்திருக்கிறார்.

லீவு ரெக்வஸ்ட் மெயிலுக்கு, "லீவு அங்கீகரிக்கப்பட்டது. டீமுடனும், மெயிலிலும் இணைப்பில் இருங்கள்" என்று பதில் வந்திருக்கிறது. இந்திய மேனேஜரின் இந்த பதிலை ஸ்கிரீன் ஷாட்டாக எடுத்து, "லீவுக்கு அப்ரூவ் கொடுப்பது, தனிப்பட்ட முறையில் எனக்கு ஏதோ நல்லது செய்வதை போல இந்திய மேனேஜர் நினைக்கிறார்" என்று குறிப்பிட்டு ஊழியர் ஷேர் செய்திருக்கிறார். அதேபோல ஜப்பான் மேனேஜரின் பதிலையும் இணைத்துள்ளார். அதில், "வெல்கம், உங்கள் லீவு நோட் செய்யப்பட்டது. வீட்டிற்கு செல்லும்போது கவனமாக இருங்கள்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த போஸ்ட்டுக்கு பலரும் கமென்ட் செய்திருக்கின்றனர். சிலர், "நானும் ஜப்பான் நிறுவனத்தின் கீழ் வேலை பார்த்திருக்கிறேன். அது புது அனுபவமாக இருந்தது" என்று கூறியிருக்கிறார். இன்னும் சிலரோ, "வொர்க்-லைஃப் பேலன்ஸ் விஷயத்தில் ஜப்பானியர்கள் கவனமாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்தியர்கள் வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்கள். இதுதான் சார் நம்ம பய புத்தி என்கிற விதத்தில், இந்திய மேனஜரின் பதிலை சிலர் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.
சர்வதேச அளவில் வேலை-வாழ்க்கை சமநிலை குறைவாக உள்ள 60 நாடுகளின் பட்டியலில் இந்தியா 42வது இடத்தில் இருக்கிறது. இந்திய நிறுவனங்களில் 4-5 தொடர் லீவு கிடைப்பது அத்தப்பூ பூப்பதை போலதான் இருக்கும். ஒவ்வொரு இந்தியரும் வாரத்திற்கு 45.72 மணி நேரம் உழைக்கிறார்கள். இது நிறுவனங்கள் சொல்லும் கணக்கு. உண்மையில் வேலை நேரம் அதிகமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் 45.72 மணி நேரம் என்பது உலகிலேயே மிக அதிகமான பணி நேரமாகும்.
சுகாதார வசதிகள் குறைவாக இருப்பது, வேலையில் பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளை இந்திய தொழிலாளர்கள் எதிர் கொண்டிருக்கிறார்கள்.
-
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
ஈரான் போர் உச்சத்துல இருக்கு.. ஆனாலும் இந்தியாவில் தங்கம் விலை பெருசா உயரல! காரணம் இதுதான்! -
மோடிக்கு சிக்கல்.. அமெரிக்காவிலிருந்து வந்த முக்கிய அறிக்கை! முதுகில் குத்தும் டிரம்ப்? -
வளைகுடா இந்தியர்களுக்கு மேஜர் அறிவிப்பு.. கத்தாரிலிருந்து சவுதி அரேபியா வழியாக நாடு திரும்ப ஏற்பாடு -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்!












Click it and Unblock the Notifications