இந்திய மேலாளர் vs ஜப்பான் மேனேஜர்! லீவு கேட்டதுக்கு பதிலை பாருங்க! நம்மாளுங்க திருந்த மாட்டாங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலை-வாழ்க்கை இரண்டையும் சமமாக பேலன்ஸ் செய்து போக வேண்டும். அப்போதுதான் இரண்டும் சரியாக இருக்கும். ஆனால், இந்தியாவில் இதற்கான சாத்தியமே இல்லை என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் ஊழியர் ஒருவர் தனது இந்திய மேனேஜர் மற்றும் ஜப்பான் மேனேஜரிடம் லீவு கேட்டபோது அவர்கள் என்ன ரிப்ளை கொடுத்தார்கள் என்பதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ரெடிட் சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். இந்த போஸ்ட் பரவலாக ஷேராகி வருகிறது.

இந்த ஊழியர், தற்போது ஜப்பான் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதற்கு முன்னர் ஒரு இந்திய நிறுவனத்தில் பணியாற்றியிருந்தார். அங்கு வேலை செய்தபோது, குடும்ப விஷயம் தொடர்பாக அவசரமாக வெளியூர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. அவருக்கு 7 நாட்கள் கேஷுவல் லீவு பெண்டிங்கில் இருந்தது. எனவே மேனேஜரிடம் லீவு அப்ளை செய்திருக்கிறார்.

Japan India

லீவு ரெக்வஸ்ட் மெயிலுக்கு, "லீவு அங்கீகரிக்கப்பட்டது. டீமுடனும், மெயிலிலும் இணைப்பில் இருங்கள்" என்று பதில் வந்திருக்கிறது. இந்திய மேனேஜரின் இந்த பதிலை ஸ்கிரீன் ஷாட்டாக எடுத்து, "லீவுக்கு அப்ரூவ் கொடுப்பது, தனிப்பட்ட முறையில் எனக்கு ஏதோ நல்லது செய்வதை போல இந்திய மேனேஜர் நினைக்கிறார்" என்று குறிப்பிட்டு ஊழியர் ஷேர் செய்திருக்கிறார். அதேபோல ஜப்பான் மேனேஜரின் பதிலையும் இணைத்துள்ளார். அதில், "வெல்கம், உங்கள் லீவு நோட் செய்யப்பட்டது. வீட்டிற்கு செல்லும்போது கவனமாக இருங்கள்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த போஸ்ட்டுக்கு பலரும் கமென்ட் செய்திருக்கின்றனர். சிலர், "நானும் ஜப்பான் நிறுவனத்தின் கீழ் வேலை பார்த்திருக்கிறேன். அது புது அனுபவமாக இருந்தது" என்று கூறியிருக்கிறார். இன்னும் சிலரோ, "வொர்க்-லைஃப் பேலன்ஸ் விஷயத்தில் ஜப்பானியர்கள் கவனமாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இந்தியர்கள் வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்கள். இதுதான் சார் நம்ம பய புத்தி என்கிற விதத்தில், இந்திய மேனஜரின் பதிலை சிலர் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

சர்வதேச அளவில் வேலை-வாழ்க்கை சமநிலை குறைவாக உள்ள 60 நாடுகளின் பட்டியலில் இந்தியா 42வது இடத்தில் இருக்கிறது. இந்திய நிறுவனங்களில் 4-5 தொடர் லீவு கிடைப்பது அத்தப்பூ பூப்பதை போலதான் இருக்கும். ஒவ்வொரு இந்தியரும் வாரத்திற்கு 45.72 மணி நேரம் உழைக்கிறார்கள். இது நிறுவனங்கள் சொல்லும் கணக்கு. உண்மையில் வேலை நேரம் அதிகமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் 45.72 மணி நேரம் என்பது உலகிலேயே மிக அதிகமான பணி நேரமாகும்.

சுகாதார வசதிகள் குறைவாக இருப்பது, வேலையில் பாதுகாப்பு மற்றும் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பது போன்ற பிரச்சனைகளை இந்திய தொழிலாளர்கள் எதிர் கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+